Published : 10 Sep 2014 10:01 AM
Last Updated : 10 Sep 2014 10:01 AM
வேளாண் பம்ப் செட்டுகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்ஸ் நிறுவனம் இப்போது விவசாயத்துக்குத் தேவையான எந்திரங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கொல்காபூரில் ககால் எனுமிடத்தில் நவீன வேளாண் கருவிகள் உற்பத்திக்கென புதிய ஆலையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. ஸ்மார்டர் ஃபார்ம் மெஷின் என்ற இந்த புதிய ரக இயந்திரம் பவர் டில்லர் போன்ற தோற்றமுடையது. முற்றிலும் இந்நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டது. இந்த கருவி டிராக்டர் போல செயல்படும். இதனை விவசாயிகள் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தின் பன்முக தேவையை நிறைவேற்றும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் பயன்படுத்த முடியும். புதிய ரக ஸ்மார்ட் ஃபார்ம் மெஷின் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் துணைத் தலைவவர் அந்தோணி செருகரா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT