Published : 23 Jan 2014 10:00 AM
Last Updated : 23 Jan 2014 10:00 AM

புதிய உச்சத்தில் பங்குச்சந்தை

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் வர்த்தகத்தின் முடிவில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 86 புள்ளிகள் உயர்ந்து 21338 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்தது. பார்மா மற்றும் உலோக பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்ததே சந்தையின் உயர்வுக்குக் காரணம்.

வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 21377 புள்ளிகளும், குறைந்தபட்சமாக 21168 புள்ளிகளுக்கும் சென்செக்ஸ் சென்றது. இதற்கு முன்பு டிசம்பர் 9-ம் தேதி 21326.42 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்ததே வர்த்தகத்தின் முடிவில் அதிகபட்ச புள்ளியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 6338.95 புள்ளிகளில் முடிவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x