Published : 05 Jan 2017 10:23 AM
Last Updated : 05 Jan 2017 10:23 AM

பணமதிப்பு நீக்கத்தினால் கேரள சுற்றுலா துறைக்கு ரூ.1,000 கோடி இழப்பு: கேரள சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

பணமதிப்பு நீக்கம் காரணமாக கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 முதல் 15% வரை சரிந்துள்ளது. அதேபோல உள்நாட்டு பயணி களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது என கேரளா சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். இதன் காரணமாக கேரளாவுக்கு சுமார் 1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பணமதிப்பு நீக்கத் துக்கு முன்பாக உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் நவம்பர் 8-க்கு பிறகு சுற்றுலா வருபவர்களின் எண் ணிக்கை மிகவும் சரிந்திருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக மட்டும் ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. வெளி நாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் போதுமான அளவுக்கு இந்திய பணம் கிடைப்பதில்லை.

இது தொடர்பாக மத்திய அரசிடம் பல முறை புகார் அளித்தும் மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக மாநில அரசு எதுவும் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட குறைந்த அளவு தொகையை மட்டும் செலவு செய்கின்றனர். இதனால் உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கழிமுக துவாரங்களில் உள்ள படகு வீடுகள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கேரளா சுற்றுலா துறையை ஊக்குவிக்க மாநில அரசு தேவையான நட வடிக்கைகளை எடுத்துவருகிறது.

கேரளா கட்டுமான முதலீட்டு நிதியில் இருந்து, சுற்றுலா துறைக்கு ரூ.1,000 கோடி நிதி கேட் டிருக்கிறோம். உச்ச நீதிமன்றம் கூட்டுறவு துறைக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாலும், இந்த துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x