Published : 30 Dec 2016 10:29 AM
Last Updated : 30 Dec 2016 10:29 AM
தமிழகத்தில் வோடபோன் 4-ஜி சேவை கோயம்புத்தூரில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 4 ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வோடபோன் 4-ஜி சிம்மை அறிமுகம் செய்து பேசிய, அந்த நிறுவனத்தின் தமிழக தலைவர் (வணிகம்) எஸ்.முரளி, ‘ஏற்கெனவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 4-ஜி சேவையை வழங்கி வருகிறோம். தமிழ்நாட்டில் கோவை மற்றும் திருப்பூரில் தற்போது 4-ஜி சேவை அறிமுகம் செய்கிறோம். 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சேவை விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழகத்தில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடிக்குமேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 800-க்கும் மேற்பட்ட வோடபோன் அலுவலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு மேம் படுத்தப்பட்ட 4-ஜி சிம் இலவசமாக வழங்கப்படுவதுடன், 2 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.8-க்கு 30 எம்.பி. முதல் ரூ.999-க்கு 22 ஜி.பி. வரை பல்வேறு கட்டணங் களில் டேட்டாக்கள் வழங்கப்படும். மேலும், வோடபோன் பிளே மூலம் 3 மாதங்களுக்கு திரைப்படம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு சேவைகளும் வழங்கப்படும். இவற்றை அதிவேகமாக பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்ய முடியும்.
ஏற்கெனவே 20 நாடுகளில் வோடபோன் 4-ஜி சேவையில் செயல்பட்டு வருவதால், சந்தாதாரருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, புதிய மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தில் அதிவேக டேட்டா சேவை அளிக்கிறோம் என்றும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT