Published : 06 Oct 2016 10:44 AM
Last Updated : 06 Oct 2016 10:44 AM

தனிநபர் கடன் வட்டியை குறைக்கும் ஃபுல்லர்டன் இந்தியா

வங்கியல்லாத நிதிச் சேவை நிறுவனமான ஃபுல்லர்டன் இந்தியா தனிநபர் கடனுக்கு வட்டிக் குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தில் 0.50 சதவீத சலுகையை அறிவித் துள்ளது. மேலும் பெண் விண்ணப்ப தாரர்களுக்கான பரிசீலனை கட்ட ணத்தில் 50 சதவீத சலுகையையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் இந்த நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், வர்த்தகம், சந்தையிடல் துறையின் தலைவருமான ராகேஷ் மாக்கர் பேசியதாவது...

பண்டிகை கால தனிநபர் நிதித் தேவைகளை முன்னிட்டு ஃபுல்லர்டன் இந்தியா பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. தனி நபர் கடன்கள் தவிர வர்த்தக மற்றும் வாகனக் கடன்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். தனிநபர் கடன் அளிப்பில் இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர்பார்க் கிறோம். அதே சமயத்தில் இந்த ஆண்டில் சிறிய ரக வர்த்தக வாகனங்களுக்கான கடனும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வும் குறிப்பிட்டார். இந்தியா முழு வதும் 16 லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு சேவை அளித்து வருவதாகவும் கூறினார்.

இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 527 கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 73 கிளைகள் உள்ள நிலையில் புதிதாக விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்குடி, புதுக் கோட்டை உட்பட 8 ஊர்களில் கிளைகளை திறக்கவும் திட்ட மிட்டுள்ளது. தனிநபர் கடன், அடமான கடன், இருசக்கர வாகன கடன் மற்றும் கல்வி, எஸ்எம்இ கடன் உள்ளிட்ட சந்தைகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் சர்வதேச முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x