Published : 05 Dec 2015 10:40 AM
Last Updated : 05 Dec 2015 10:40 AM
அனில் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், செல்போன் கோபுரங் கள் மற்றும் இந்தியாவில் உள்ள கண்ணாடியிழை (ஆப்டிக் பைபர்) சொத்துகளை தனியார் ஈக்விட்டி நிறுவனமான டிபிஜி மற்றும் சஞ்சீவ் அகுஜா நடத்தி வரும் டில்மான் குளோபல் நிறுவ னத்திற்கு விற்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.30,000 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ.40,000 கோடி கடன் சுமையை குறைக்க ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொல்போன் கோபுரங்கள் சொத்து மதிப்பு ரூ.22,000 கோடியும் ஆப்டிக் பைபர் சொத்துகள் உட்பட உள்கட்டமைப்பு சொத்து மதிப்பு ரூ.7,000 கோடியிலிருந்து 8,000 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தமாக இது கருதப்படு கிறது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனம் ஆண்டுதோறும் செலுத்தி வரும் வட்டியின் அளவு கணிசமாகக் குறையும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT