Published : 06 Oct 2016 10:44 AM
Last Updated : 06 Oct 2016 10:44 AM
இந்தியாவில் இயந்திரமயமாதல் அதிகரித்து வருவதன் காரணமாக 69 சதவீத பணிகள் பாதிப்படையும் என உலக வங்கி தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இதே காரணத் தால் சீனாவில் 77 சதவீத பணி களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. தொழில்நுட்பம் இந்த உலகை மாற்றி அமைக்கும் என அனைவருக்கும் தெரியும் என உலக வங்கியின் தலைவர் ஜிம் கிம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆப்பிரிக்காவில் பெரும்பாலான பகுதியில் தொழில்நுட்பம் சந்தை யின் போக்கினை மாற்றும். எத்தியோப்பியா நாட்டில் 85% பணிகள் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றங்களை கொண்டு வரும்போதுதான் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். கட்டுமானத்துறையில் முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
சீனாவில் ஒரு குழந்தை திட்டம் இருப்பதால் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 10 சதவீதத்துக்கு குறைவாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது 38.7 சதவீதமாக இருக்கிறது. எதிர்கால டிஜிட்டல் சூழலில் குழந்தைகளால் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும். வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருக்கும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT