Published : 20 Sep 2015 02:38 PM
Last Updated : 20 Sep 2015 02:38 PM

இந்திய - அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டத்தில் மோடி உரை

இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருக் கிறார். அங்கு இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டார்ட் அப் இந்தியா குறித்து கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்.

ஐடி துறை அமைப்பு நாஸ்காம், டை சிலிகான் வேலி மற்றும் ஐஐஎம் அகமதாபாத் ஆகியவை சேர்ந்த இந்த நிகழ்ச்சியை சிலிகான் பள்ளத்தாக்கில் நடத்து கின்றன. இந்தியாவில் ஸ்டார்ட் அப் அமைப்பு குறித்து செப். 27-ம் தேதி அங்கு மோடி உரையாற்றுகிறார்.

இந்திய நிறுவனங் கள் தங்களது பொருட்களை அங்கு பார்வைக்கு வைக்கின்றன. தங்களது சாதனைகளை முதலீட் டாளர்கள் மற்றும் சிலிகான் பள்ளத் தாக்கு நிறுவனங்களுக்கு காண் பிக்கின்றனர்.

இந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் இடையே அமெரிக்க தொழிலதிபர் களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x