Published : 06 Jan 2015 11:32 AM
Last Updated : 06 Jan 2015 11:32 AM
கனரா வங்கியின் துணை நிறுவனமான கேன்பேங்க் வெஞ்சர்ஸ் கேபிடல் ஃபண்ட் லிமிடெட் நிறுவனம் (சிவிசிஎப்எல்) ஆனந்த் டெக்னோ எய்ட்ஸ் இன்ஜினீயரிங் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ரூ. 16 கோடிக்கு வாங்கியுள்ளது.
எமர்ஜிங் இந்தியா குரோத் ஃபண்ட் என்ற முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ. 435 கோடியே சிவிசிஎப்எல் திரட்டியுள்ளது. அதிலிருந்து ஆனந்த் டெக்னோ எய்ட்ஸ் நிறுவனப் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.
ஆனந்த் டெக்னோ நிறுவனம் உருளை வால்வுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய வால்வுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் பயன்படுத் தப்படுகிறது. புனேயில் உள்ள ஆலை விரிவாக்கத்துக்கு இத் தொகையை இந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது. ஆனந்த் டெக்னோ நிறுவனம் இப்போது ரூ. 236 கோடி வருமானம் ஈட்டுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதை ரூ. 600 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
31 எண்ணெய் எரிவாயு நிறுவனங்களுக்குத் தேவையான பாகங்களை இந்நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. ஐ.ஓ.சி, ஹெச்.பி.சி.எல்., பிஹெச்இஎல் ஆகிய நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளராகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT