Published : 22 Mar 2014 02:04 PM
Last Updated : 22 Mar 2014 02:04 PM

அரசின் பங்கு விலக்கு இலக்கை தாண்டும்

பொதுத்துறை இ.டி.எஃப் முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், பங்கு விலக்கு மூலம் அரசு நிர்ணயத்த இலக்கை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை இ.டி.எஃப். மூலம் 4000 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அரசு 3000 கோடி ரூபாய் அளவுக்குதான் எதிர்பார்த்தது.

இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கு மூலம் அரசு நிர்ணயம் செயத 16,027 கோடி ரூபாயை விட அதிக தொகை, அதாவது 17000 கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. முன்னதாக மத்திய அரசு 40000 கோடி ரூபாயை பங்கு விலக்கு முலம் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் இந்த தொகை 16,027 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்த இ.டி.எஃப்.-ல் முதலீடு செய்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x