Published : 30 Apr 2018 07:18 PM
Last Updated : 30 Apr 2018 07:18 PM

என்டவுன்மெண்ட் திட்டத்தை உடனே தேர்ந்தெடுக்க 5 காரணங்கள்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, வேலை செய்து சம்பாதிக்கும் ஒருவரின் ஒரு மாத சம்பளமும், அதற்கான செலவும், திட்டமிடலும் ரோலர்கோஸ்டரில் சவாரி செய்வது போலதான். மாதத்தின் முதல் வாரத்தில் எல்லா பொருட்களையும் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் மாதக்கடைசியில் சாப்பிட ஒரு பிஸ்கட் வாங்குவது கூட தங்க பிஸ்கட்டுக்கான செலவைப் போல தோன்றும். கேட்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் நாம் அனைவரும் இதைக் கடந்து தான் வருகிறோம்.

இதற்கு ஓர் தீர்வு இருக்கிறதா, அல்லது காலம் முழுவதும் இந்த வரவு செலவு என்ற ரோலர் கோஸ்டர் நம்மை உட்கார வைத்து நடுங்கச் செய்யப்போகிறதா? கண்டிப்பாக தீர்வு உண்டு. அதற்கான பதிலே என்டவுன்மெண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது. அப்படி முதலீடு செய்ய முக்கியமான 5 காரணங்கள் என்னவென்பதைப் பார்த்தும், இன்னும் சற்று நம்பிக்கையோடு இதை அணுகுவோம்.

சேமிக்கும் பழக்கத்தைத் தரும்

என்டவுன்மெண்ட் உள்ளிட்ட அத்தனை முதலீடு திட்டங்களுக்கும் இது பொருந்தும். என்டவுன்மெண்ட் திட்டம், மாதந்திர முதலீடு என்ற பழக்கத்தை உங்களுக்குத் தரும். உங்கள் முதலீடு வளர்வதைப் பார்க்கும்போது அது உங்கள் இயல்பாக மாறும். உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கப்போவதற்கான அறிகுறிகளே இவை.

ஆயுளுக்கான காப்பீடும், உத்திரவாதமான சொத்து உருவாக்கமும் இருக்கும்

என்டவுன்மெண்ட் திட்ட முதலீடு முதிர்ச்சி அடையும்போது கையில் பெருந்தொகை நிச்சயமாக வரும். மேலும் முதலீடு செய்த பணமும் கண்டிப்பாகத் திரும்பும். இதோடு என்டவுன்மெண்ட் பாலிசி இருக்கும் வரை உங்களுக்கான ஆயுள் காப்பீடும் இருக்கும். உங்கள் பணம் பெருகுவதைப் பார்க்கும் அதே வேளையில், உங்கள் அன்பானவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறீர்கள்.

நீண்ட கால நிதிசார் இலக்குகளை அடைய உதவும்

சொந்த வீடு, ஆடம்பரமான கார் என நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய இலக்கு இருக்கும். ஆனால் நன்றாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவற்றை எட்டி விட முடியாது. பெரும்பாலான என்டவுன்மெண்ட் திட்டங்களைப் பொருத்த வரை நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள், எவ்வளவு பணம் திரும்ப வரும், திட்டத்தின் முடிவில் உங்கள் கைக்கு வரப்போகும் பெருந்தொகை என்ன,உள்ளிட்ட அனைத்து விவரவங்களும் முன் கூட்டியே தெரிந்திருக்கும். மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமான திட்டங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஆபத்தற்றது

அனைவராலும் தங்கள் பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து பதட்டத்தோடு காத்திருக்க முடியாது. ஆனால் அதற்கென நீங்கள் முதலீடே செய்ய முடியாது, அதன் மூலம் லாபமே அடைய முடியாது என்பதும் கிடையாது. என்டவுன்மெண்ட் திட்டங்கள் அனைத்தும் முடிவில் உத்திரவாதமான லாபத்துடன் தான் வருகின்றன. ப்ரீமியம் தொகை என நாம் கட்டும் பணமும் பெருந்தொகையாக திரும்ப வரும்.

பணம் எப்போது வேண்டும் என நீங்கள் முடிவு செய்யலாம்

எல்லா என்டவுன்மெண்ட் திட்டங்களுமே நீண்ட கால திட்டங்கள் அல்ல. ஒரு வேளை நீங்கள் சுற்றுலா விரும்பியாக இருந்தால் அவ்வபோது பணத்தைச் சேர்ந்து திரும்ப எடுத்துக் கொள்ளும் வகையில் திட்டங்கள் உள்ளன. ஏன் ஒரு கட்டத்துக்குப் பிறகு மாதா மாதம் கூடுதல் வருமானம் போல பணம் கிடைக்கும் வகையிலும் என்டவுன்மெண்ட் திட்டங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x