Published : 21 May 2017 03:59 PM
Last Updated : 21 May 2017 03:59 PM
ரேன்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க ரஷ்யாவில் கணினிகளில் புனிதநீர் தெளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க அந்நாட்டின் பாதுகாப்புத் துறை ஒரு நூதன முயற்சியில் ஈடுபட்டது.
பாதுகாப்புப் பிரிவில் தொழில்நுட்பத் துறையில் உள்ள கணினிகளில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. கணினிகளுக்கு பாதிரியார் புனித நீரும் தெளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஆனால், இந்தப் புகைப்படங்களும், ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT