Published : 18 Dec 2014 10:09 AM
Last Updated : 18 Dec 2014 10:09 AM

தொலைக்காட்சி நேரலையில் கதறி அழுத தொகுப்பாளர்

குழந்தைகள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானின் ஏஆர்ஒய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய செய்தித்தொகுப்பாளர் சனம் பலோச், “எனக்கிருந்த நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்துவிட்டேன்” என்று கண்ணீர்மல்க கூறினார்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளியில் தலிபான் நடத்திய தாக்குதல் தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சிகளில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டன.

ஏஆர்ஒய் செய்திச்சேனலில் நேற்று காலை நேரலையாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து அளித்துக் கொண்டிருந்த சனம் பலோச், உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “இது போன்று மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது. நாளை மீண்டும் இன்னும் கூடுதலான மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்துக்கொண்டு அமர்ந்திருப்போம். நாம் செய்வதற்கு எதுவுமே இல்லை. இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டேன். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்று கண்ணீர்மல்கக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x