Last Updated : 31 Mar, 2015 10:42 AM

 

Published : 31 Mar 2015 10:42 AM
Last Updated : 31 Mar 2015 10:42 AM

ஜப்பான் பிரதமருடன் மனோகர் பாரிக்கர் சந்திப்பு

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பார்க்கர் டோக்கியோவில் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பரில் ஜப்பான் சென்றார். இதைத் தொடர்ந்து இருநாட்டு உறவை வலுப்படுத்த இரண்டு நாள் பயணமாக ஜப்பானுக்கு பாரிக்கர் சென்றுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை நேற்று அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய 12 விமானங்களை ஜப்பானிடம் இருந்து வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x