Last Updated : 30 Oct, 2014 10:14 AM

 

Published : 30 Oct 2014 10:14 AM
Last Updated : 30 Oct 2014 10:14 AM

சீர்குலையும் சிரியா - 2

முகம்மது நபிகள் பரப்பிய இஸ்லாமிய மார்க்கம் அவருக்குப் பிறகு (கி.பி. 632ல்) இரண்டாகப் பிளவுபட்டது. நபிகள் நாயகத்தின் அடுத்தடுத்த வாரிசுகள் யாராக இருக்க வேண்டும்? இதில் தான் பிளவு. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் காலிஃப் (அதாவது முகம் மது நபியின் வாரிசுகள்) தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டுமென்று முடிவெ டுத்தார்கள். இவர்கள் தங்களை ‘சன்னி’ என்று அறிவித்துக் கொண்டனர்.

இரண்டாவது பிரிவினர் தங்களை ‘ஷியா’ என்று கூறிக் கொண்டனர். இவர்களைப் பொருத் தவரை முகம்மது நபியின் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள்தான் தங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். அல்லது அந்தப் பரம்பரையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர் தலைவராக இருக்கலாம்.

இப்போதைய உலகின் முஸ்லிம் களில் சுமார் 87 சதவிகித்ம் பேர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். பெரும்பாலான அரபு நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஆப்ரிக்கா போன்ற பகுதிகளிலும் அவர்கள்தான் மெஜாரிடி. இரான், இராக், பஹரின் போன்ற நாடுகளில் ஷியாக்கள் அதிக எண் ணிக்கையில் இருக்கிறார்கள்.

சன்னி முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு இந்தோனேஷியா. ஷியா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் நாடு இரான். உலகிலேயே சன்னி முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடு எது தெரியுமா? உலகிலேயே ஷியா முஸ்லிம்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது நாடுதான் அதுவும்! அது நம் அ(ச)ண்டை நாடான பாகிஸ்தான்.

கருத்துவேற்றுமை என்ற கட்டத்தையெல்லாம் எப்போதோ கடந்து விட்டார்கள் இந்த இரண்டு பிரிவினரும். பிரிவு, பகைமை, விரோதம் என்பதையெல்லாம் தாண்டி மற்றொரு இனத்தை அழித்து விடுவதுதான் லட்சியம் என்ற எண்ணப்போக்கு வளர்ந்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடு தான் ஐ.எஸ். இயக்கம். I.S.I.L., I.S.I.S., I.S., இந்த மூன்று அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவன்ட் என்பதன் சுருக்கம்தான் I.S.I.L.. லெவன்ட் என்ற சொல் அந்தக் காலத்தில் சிரியா, ஜோர்டான், இஸ்ரேல் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியே குறிக்கப்பட்டது என்றாலும் நாளடைவில் லெவன்ட் என்பது சிரியா மட்டுமே என்று ஆகிவிட்டது. இந்தப் பெயர் மாற்றத்தால் தன் பெயரையும் I.S.I.S. என்று மாற்றிக் கொண்டது அந்த இயக்கம். இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா.

நாளடைவில் இந்த இயக்கத் தினர் மேலும் தீவிரமாக யோசித்தார் கள். ‘’எதற்காக இஸ்லாமிய தேசமாக இராக்கையும், சிரியாவையும் மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும்? இவற்றைத் தாண்டியும் விரிவுபடுத்திக் கொள்ள லாமே’’. இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் I.S. என்று தங்கள் பெயரை சுருக்கிக் கொள்ள வைத்திருக்கிறது.

தங்கள் தலைவராக (அதாவது காலிஃபாக) இந்த இயக்கம் நியமித்திருப்பது அபுபக்கர் அல் பஹாதி என்பவரை. இவர் முன்பு இந்த இயக்கத்தின் தளபதியாக (அதாவது எமிர் என்ற பதவி) விளங்கியவர். இராக்கில் பிறந்து பாக்தாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இஸ்லாமிய மார்க்கம் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டரேட் பெற்றவர். நாளடைவில் எம்.எஸ்.சி. என்ற அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பின் முழுப் பெயர் ‘முஜாஹெதீன் ஷுரா கவுன்சில்’.

இந்த அமைப்பின் பெயர் பலருக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால் ஆறு சன்னி இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பான இவற்றில் ஒன்றின் பெயர் உலகம் முழுவதுமே பரவலாக அறியப்பட்ட ஒன்று. அல் கொய்தா!

இன்றைய தேதியில் அபுபக்கர் அல் பஹாதியைப் பிடிப்பதற்கோ, கொல்வதற்கோ உதவும் வகையில் துப்பு கொடுப்பவருக்கு ஒரு கோடி டாலர் வெகுமதி என்று அறிவித்திருக்கிறது அமெரிக்கா. இதைவிட அதிகத் தொகையை - 2.5 கோடி டாலர் அளிப்பதாக அமெரிக்கா அறிவித் திருப்பது வேறு ஒரே ஒருவரின் தலைக்குதான். அவர் அய்மான் அல் ஜவாஹிரி அல் கொய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவர். (என்ன இருந்தாலும் அல் கொய்தா அமெரிக்காவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுத்தியவர் அல்லவா? இடித்து வீழ்த்தப்பட்ட இரட்டை வணிக கோபுரங்கள்).

‘சிரிய ராணுவம்’ என்ற பெயரில் ஒரு பெரிய ‘ராணுவத்தை’ சிரியாவில் ஏற்படுத்தியது ஐ.எஸ். அதன் மூலம் இராக் வழியாக சிரியா வின் கிழக்குப் புறத்தில் ஊடுரு வத் தொடங்கியது. மூன்றே வருடங் களில் சிரியாவின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி ஐ.எஸ்.ஸின் அதிகாரத்துக்குள் வந்துவிட்டது. தற்செயலாகவோ, திட்டமிட்டோ சிரியாவிலுள்ள பெட்ரோலியக் கிணறுகள் பலவும் ஐ.எஸ்ஸால் ஆக்ரமிக்கப்பட்ட இந்தப் பகுதியில் தான் அமைந்துள்ளன.

ஐ.எஸ். அமைப்பு குறைந்தகால கட்டத்திலேயே உச்சத்தைத் தொட்டதற்கு சில காரணங்கள் உண்டு. நிதி உதவியைத் தடையில்லாமல் அளிக்கிறார்கள் வளைகுடாவைச் சேர்ந்த அரபு இனத்தவர். ‘’ஷியாக்களை ஒடுக்கு’’ இதுதான் அவர்களுக்கு இடப்படும் ஒரே கட்டளை.

சிரியாவிலும், ஈராக்கிலும் வரி வசூலிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது ஐ.எஸ். சிரியா அரசு எப்படி இவர்களை சமாளிக்கிறது? தீவிரவாத இயக்க மான ஐ.எஸ். அளவுக்கு அந்த அரசும் ஏன் உலகெங்கும் கடுமை யான கண்டனங்களை சந்திக்கிறது? நியாயமான கேள்விகள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x