Published : 25 Sep 2016 12:12 PM
Last Updated : 25 Sep 2016 12:12 PM
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதீன் நியூயார்க் நகரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஐ.நா. பொது சபையின் 71-வது ஆண்டு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் பொது விவாதத்தில் இதுவரை பாகிஸ்தான் உட்பட 131 நாடுகளின் பிரதிநிதிகள் பேசி உள்ளனர். ஆனால், பாகிஸ்தான் எழுப்பிய பிரச்சினை (காஷ்மீர்) குறித்து மற்ற 130 நாடுகள் எதுவும் குறிப்பிடவில்லை.
மேலும் விவாதத்தில் பங் கேற்று பேசிய 90 சதவீத நாடு களின் பிரதிநிதிகள், தீவிரவாதம் தங்களுக்கு பெரும் அச்சுறுத்த லாக இருப்பதாகவும் அதை எதிர்த்துப் போரிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.
இந்த கூட்டத்துக்கு நடுவே, அங்கு சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், பல்வேறு நாடுகளின் பிரதிநிதி களை சந்தித்துப் பேசினார். அப்போது, தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாக வும், அதை எதிர்த்துப் போரிட ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
குறிப்பாக காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் குறித்து விவாதித்தார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உலக நாடுகள் உறுதி அளித்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT