Published : 09 Mar 2015 11:24 AM
Last Updated : 09 Mar 2015 11:24 AM
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக துணைநிற்போம் என்று போகோஹாரம் அமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 58 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இணைய தளத்தில் போகோஹாரம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒலி வழி செய்தியில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் போகோஹாரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ், “முஸ்லிம் களின் அரசாட்சியாளரான இப்ராஹிம் இபின் அவாத் இபின் இப்ராஹிம் அல்-ஹுசைனி அல்-குரைஷிக்கு (ஐஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி) விசுவாசமாக இருப்போம் என்று நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT