Last Updated : 18 Dec, 2014 10:15 AM

 

Published : 18 Dec 2014 10:15 AM
Last Updated : 18 Dec 2014 10:15 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 3

தைமூரின் மகன்களுக்கிடையே உண்டான அரசுரிமைப் போட்டி நின்றபாடில்லை. தம்பி ஷுஜாவை துரத்திவிட்டு அண்ணன் மகமுது ஷா மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஒன்பது வருடங்கள் ஆட்சி செய்தார். ஒரு பிரச்சினை உரு வானதால், முன்பு ஜமான்ஷாவைத் தோற்கடிக்க தனக்கு உதவி செய்த ஃபதேகான் என்பவரின் கண்களைக் குருடாக்கினார்.

பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பது தொடர்கதையானது. குருடாக்கப்பட்ட ஃபதேகானின் தம்பி தோஸ்த் முகமது கான் காலப்போக்கில் துரானி வம்சத்த வரை ஒட்டுமொத்தமாக வென்று ஆப்கானிஸ்தானின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார்.

கடுமையாக நடந்து கொண்ட தால், தோஸ்த் முகமதுகான் அரி யணை ஏறிய பிறகு குழப்பங்கள் குறைந்தன. ஆனால் புதிய தலைவலிகள் தொடங்கின. பெஷாவர் பகுதி தங்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்று சீக்கியர்கள் வலிமையாக கேட்கத் தொடங்கினர்.

அதுமட்டுமல்ல. பஷ்டூனிஸ் தான் என்று அழைக்கப்பட்ட பகுதி கைபர் கணவாய்க்கு கிழக்கே இருந்தது. பஷ்டூன்கள் அதிகம் தங்கிய இடம் அது. அந்தப் பகுதியை சீக்கியர்கள் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

இதற்கு நடுவே ஷுஜா ஒரு சிறு படையெடுப்பை வடக்குப் பகுதியில் நடத்த தோஸ்த் முகம்மது அதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது காபூலிலிருந்து தோஸ்த் முகம்மது விலகிச் செல்ல வேண்டியிருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சீக்கியர்கள் பெஷாவரைக் கைப் பற்றினார்கள். சீக்கியர் படைக்கு தலைமை ஏற்றவர் மகாராஜா ரஞ்சித்சிங்.

அடுத்த சில வருடங்களில் சீக்கியரைப் போரில் தோற்கடித் தார் தோஸ்து முகம்மது. கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அவர் பெஷாவரை தன் வசம் ஆக்கிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அவருக்குப் போதாத காலம். ஜெனரல் ஆக்லன்ட் பிரபுவின் உதவியைக் கோரினார். இந்தப் பிரபு இந்தியாவின் அப்போதைய ஆங்கிலேயே கவர்னர் ஜெனரல் (வணிகத்தில் புகுந்து ஆட்சியை இந்தியாவில் நிறுவியிருந்தது பிரிட்டன்).

தோஸ்த் முகம்மது உதவி கேட்ட தும் பிரிட்டனுக்கு படு சந்தோஷம். உற்சாகம் பொங்க ஆப்கானிஸ் தானின் உள்நாட்டு விஷயங்களி லும் தலையிடத் தொடங்கியது பிரிட்டன். அக்கறை! மத்திய ஆசியாவை பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டிருந்தது. சிந்து, காஷ்மீர் பகுதிகள்கூட பிரிட்டனின் வசம் வந்துவிட்டன.

மற்றொருபுறம் ரஷ்யாவும் தன் பங்குக்கு பல பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்தது. இரானுக்கும், ரஷ்யாவுக்கும் நட்பு உண்டாகியிருந்தது. ஆப்கானிஸ் தானில் உள்ள ஹெராத் நகரை இரான் கைப்பற்றியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தது ரஷ்யா. தோஸ்த் முகம்மது தன்னிடம் உதவி கேட்டதும் பிரிட்டன் நிறைய நிபந்தனைகளை அவருக்கு விதித்தது.

‘ரஞ்சித் சிங் உங்களிடம் தலை யிடாமல் இருக்க உதவுகிறோம். ஆனால் இனிமேல் இரானியர்க ளோடும், ரஷ்யர்களோடும் உங் களுக்கு இருக்கும் தொடர்புகளை யெல்லாம் அறுத்துக் கொள்ள வேண்டும். பெஷாவர் மீது உரிமை கோரக் கூடாது. காந்தஹார் கேட்கும் தன்னாட்சியை மதிக்க வேண்டும். (அப்போது காந்தஹார் தோஸ்த் முகம்மதுவின் சகோதரர்கள் வசம் இருந்தது). ரஷ்யாவின் பிரதிநிதியாக காபூலில் தங்கியிருப்பவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்’.

ஆக்லன்ட் பிரபு இப்படி விதித்த நிபந்தனைகளையெல்லாம் (கொஞ்சம் வெறுப்புடன்) ஏற்றுக் கொண்டார் தோஸ்த் முகம்மது. ஆனால் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் வேண்டுமென்று தோஸ்த் கேட்டபோது, தலையாட்டினாலும் தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றார் ஆக்லன்ட் பிரபு.

ஒரு கட்டத்தில் இதனால் வெறுப்படைந்தார் தோஸ்த் முகம்மது. பிரிட்டனை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ‘இனி ரஷ்யாதான் என் நண்பன்’ என்பதுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினார். பிரிட்டனுக்கு ஆத்திரம் வந்தது. தோஸ்த் முகம்மதை ஆட்சியிலிருந்து வெளியேற்றத் தீர்மானித்தது. தனக்கு ஆதரவாக இருந்த ஷுஜாவை மீண்டும் அரசர் ஆக்கலாம் என்று முடிவெடுத்தது.

1838ல் ஆக்லன்ட் பிரபு, ஷுஜா, ரஞ்சித் சிங் ஆகிய மூவரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி ‘ஷுஜா காபூல் மற்றும் காந்தஹார் நகரங்களைக் கைப்பற்றுவார். இதற்கு பிரிட்ட னும், சீக்கியர்களும் உதவ வேண் டும். ஏற்கெனவே ரஞ்சித்சிங் வசம் இருந்த ஆப்கானிய மாகாணங் களை இனி சீக்கியர்களே ஆட்சி செய்வார்கள். ஹெராத் இனி சுதந்திரம் பெற்ற பகுதி’.இப்படியெல்லாம் ஒப்புக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து முதல் ஆங்கிலேய-ஆப்கன் போர் வெடித்தது. (நடைமுறையில் சீக்கியர்கள் ஷுஜாவை அரிய ணையில் ஏற்றுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனவே ரஞ்சித் சிங்கின் படை இதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்கவில்லை).

தோஸ்த் முகம்மது ஆட்சியி லிருந்து நீக்கப்பட்டார் ஷுஜா அரியணையில் அமர்ந்தார். காந்தஹார் கைவசமானது. கஜினியிலுள்ள கோட்டையும்தான்.

பாமியன், புக்காரா என்று நகரம் நகரமாக தோஸ்த் முகம்மது கணவாய்கள் வழியாக மறைந்து சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின்னர் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார். 1840-ல் அவர் பிரிட்டிஷ் அரசால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

(இன்னும் வரும்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x