Last Updated : 31 Oct, 2014 04:45 PM

 

Published : 31 Oct 2014 04:45 PM
Last Updated : 31 Oct 2014 04:45 PM

அமெரிக்காவில் கட்டடம் மீது குட்டி விமானம் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி

அமெரிக்காவின் கான்சாஸ் விமான நிலையத்தில் குட்டி விமானம் ஒன்று புறப்படும்போது தடுமாறிய நிலையில் கட்டடத்துக்குள் பாய்ந்து பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 4 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விச்சிடா விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை குட்டி விமானம் விமான தளத்திலிருந்து புறப்பட்டபோது தடுமாறிய நிலையில், ஓடுதளத்திலிருந்து அருகே உள்ள கட்டடத்துக்குள் எதிர்ப்பாராத நிலையில் புகுந்தது.

விமானி மற்றும் கட்டடத்தில் இருந்து மூன்று பேரும் பலியாகியதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தால் பல கி.மீ தொலைவுக்கு புகை மூண்டது. இந்த விபத்தால் அங்கு பதற்றம் உண்டானது.

விமானத்தில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் மிகப் பெரிய அளவில் இல்லாமல் இருந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x