Published : 12 Apr 2016 07:48 AM
Last Updated : 12 Apr 2016 07:48 AM
சமூக வலைதளத்தில் சர்ச்சைக் குரிய படத்தை பதிவிட்டதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கின் மனைவி ஹோ சிங் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ லூங் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் வாரிசு அரசியலை உருவாக்க முயற் சித்து வருவதாக, அவரது சகோதரி அண்மையில் ‘பேஸ் புக்கில்’ குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் லீயின் மனைவி ஹோ சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் குரங்கு படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த படத்தை கண்ட அவரது பேஸ்புக் பின்தொடர்பவர்கள் உடனடியாக அதை பிறருக்கு பகிர்ந்து கொண்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று ஹோ சிங் அந்த படத்தை தனது பதவில் இருந்து அதிரடியாக நீக்கினார். பின்னர் அவர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கூறுகையில், ‘‘சமூகவலைதளத்தில் இடம் பெற்றிருந்த வித்தியாசமான பொத்தான்களை அழுத்தி விளையாடும் போது, இந்த தவறு நிகழ்ந்துவிட்டது. உலகில் எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கின்றன.
அதை விட்டுவிட்டு இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகிவிடும். எங்களது குடும்ப பிரச்சினைகளுக்கு நாங்களே தீர்வு காண்போம்’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT