Last Updated : 26 Feb, 2015 09:11 AM

 

Published : 26 Feb 2015 09:11 AM
Last Updated : 26 Feb 2015 09:11 AM

இந்தியாவில் நரேந்திர மோடி அரசில் மனித உரிமை மீறல் அதிகம்: சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அரசில் மதக் கலவரம் அதிகரித்திருப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தின் மூலம் ஆயிரக் கணக்கான விவசாயிகள் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித் துள்ளது.

அம்னஸ்டி அமைப்பின் ஆண்டறிக்கை பிரிட்டனில் வெளியிடப் பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நல்ல நிர்வாகம், அனைவருக் குமான வளர்ச்சி, நிதிச் சேவை களும், சுகாதாரமும் ஏழைகளுக் கும் கிடைக்கும் என பல்வேறு உத்தரவாதங்களை பிரச்சாரத்தின் போது மோடி அளித்திருந்தார்.

தனிமனித சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் தலை யிடுவதை அதிகாரம் படைத் தவர்கள் தொடர்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலும் வேறு சில மாநிலங்களிலும் மதக் கலவரம் நடைபெற்றுள்ளது. ஜாதி வாரியான பாகுபாடு, ஜாதிக் கலவரம் ஆகியவை தொடர்ந்து பரவுகின்றன.

உ.பி.யில் இருபிரிவினருக் கிடையே நடைபெற்ற மதக்கலவரத் தில் அரசியல்வாதிகள் சிலரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். வன் முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காக சிலர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில், இந்து அமைப்புகள் சிறுபான்மை யினரைக் கட்டாயப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றுவதாக தகவல்கள் வெளியாயின.

ஆயிரக்கணக்கான விவசா யிகள் தங்கள் நிலங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வலுக்கட்டா யமாக வெளியேற்றப்படும் அபாயத்தை நிலம் கையகப் படுத்தும் அவசர சட்டம் உருவாக்கி யுள்ளது. குறிப்பாக, ஆதிவாசி மக்கள் புதிய சுரங்கங்கள், அணைகள் அல்லது அவற்றை விரிவாக்கும் பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x