Published : 27 Jun 2014 12:59 PM
Last Updated : 27 Jun 2014 12:59 PM

160 பேரை கொன்று குவித்தது ஐ.எஸ்.எஸ்.ஐ: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்

இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் 160 பேரை சிறைபிடித்து கொலை செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். கிளிர்ச்சியாளர்கள், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

அண்மையில், 1,700 ராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளதாக தீவிரவாதிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் இணையத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டனர்.

ஆனால், அந்த புகைப்படங்கள் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப்பெரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து இராக் அரசு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,ஜூன் 11 - 14 தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் 160 முதல் 190 பேர் வரை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் திக்ரித் நகரில் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என இராக்கில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x