Published : 23 May 2018 03:30 PM
Last Updated : 23 May 2018 03:30 PM

இஸ்ரேல் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு முழு விசாரணை தேவை: பாலஸ்தீனம்

இஸ்ரேல் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச  நீதிமன்றத்தில் முழு விசாரணை தேவை என்று பாலஸ்தீனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் குறித்த அதாரங்களை சர்வதேச நீதிமன்றத்தில் அளிக்கத் தயாராக இருப்பதாக பாலஸ்தீனம் வெளியுறவுத் துறை அமைச்சர் ரயித் மாலிக் தெரிவித்திருக்கிறார்.

காசா எல்லையில் கடந்த ஆறு வாரங்களாக இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதில் 100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்றும் மாலிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக ஜெருசலமே இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.

காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து  கடந்த சில மாதங்களாகவே பேரணியாகச் சென்று வருகின்றனர்.

இதனை எதிர்த்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின் பேரணி வன்முறையாக மாறியது. இதில் 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா.  சபையின் விசாரணையை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் மீண்டும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x