Published : 24 Apr 2018 09:42 AM
Last Updated : 24 Apr 2018 09:42 AM

பாரிஸ் தாக்குதல் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

கடந்த 2015 நவம்பர் 13, 14-ம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 6 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 130 பேர் உயிரிழந்தனர். 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர் பாக தீவிரவாதி சலா அப்டேசலாமை (28) பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் 2016 மார்ச் 15-ல் கைது செய்தனர். அப்போது போலீஸார் மீது சலா துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதுகுறித்து பிரசல்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் சலாவுக்கு நேற்று 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சலா தற்போது பாரிஸ் சிறையில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x