Last Updated : 24 Feb, 2018 04:37 PM

 

Published : 24 Feb 2018 04:37 PM
Last Updated : 24 Feb 2018 04:37 PM

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவர தடுமாறும் ஐ.நா.

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை தடுமாறி வருகிறது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.

தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவிக் குழுக்களை அங்கு அனுமதிக்கக் கூறியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த வியாழக்கிழமை தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

ஆனால் இந்தத் தீர்மானத்தை ரஷ்யா உடன்பாடில்லை என்று மறுத்துவிட்டது. இதனால் இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு தாமதமாகி வருகிறது.

போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ரஷ்யா தாமதிப்பதாக ரஷ்யா மீது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள பிற நாடுகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் இதற்கான வாக்கெடுப்பு இன்று நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x