Last Updated : 24 Feb, 2018 03:07 PM

 

Published : 24 Feb 2018 03:07 PM
Last Updated : 24 Feb 2018 03:07 PM

ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: ஒருவர் பலி; காயம் 6

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கான் தலைநகர் காபூலில் தூதரக பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 6 பேர் காயமடைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் உள்துறை அமைச்சர் நஜீப் டேனிஷ் கூறும்போது, தாக்குதல் நேட்டோ தலைமையகத்துக்கு அருகேவுள்ள அமெரிக்க தூதரகம் அருகில் நடத்தப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்றார்.

இந்தத் தாக்தலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இது தொடர்பான செய்தியை தனது இணையப் பக்கத்தில் ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x