Published : 12 Feb 2018 12:36 PM
Last Updated : 12 Feb 2018 12:36 PM

லண்டன் விமான நிலையம் அருகே 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டெடுப்பு

லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப் போரில் பயன்பத்தப்பட்ட  குண்டு அதிகாரிகளால் கண்டெடுக்கப்படுள்ளது.

லண்டன் விமான நிலையம் அருகே உள்ள தேம்ஸ் நதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு வெடிப்பு தன்மை இருப்பதாகவும், அதனை செயலிக்க செய்யும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. லண்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x