Published : 15 Dec 2017 05:06 PM
Last Updated : 15 Dec 2017 05:06 PM

பிரான்ஸில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதி விபத்து: 6 பேர் பலி

பிரான்ஸில் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், "பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள பெர்பிகான் அருகே  பள்ளிப் பேருந்து மற்றும் ரயில் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஆறு பேர் பலியாகினர். இதில் நான்கு பேர் பள்ளிக் குழந்தைகள். 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மோசமான விபத்தாக இது அறியப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x