Published : 15 Dec 2017 10:37 AM
Last Updated : 15 Dec 2017 10:37 AM
பிரெக்ஸிட் விவகாரம் தொடர் பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தோல்வியடைந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள பிரிட்டன் அந்த கூட்டமைப்பில் இருந்து வரும் 2019 மார்ச் 29-ம் தேதி வெளியேற உள்ளது. பிரெக்ஸிட் என்றழைக்கப்படும் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை யில் 18 மாத இழுபறிக்குப் பிறகு அண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் பிரிட்டனில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவரான டொம்னிக் கிரீவ் நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில், பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரப்பட்டி ருந்தது.
இந்த தீர்மானம் மீது நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 309 பேரும், எதிராக 304 பேரும் வாக்களித்தனர். இதன்காரணமாக 5 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் தெரசா மே தோல்வி யடைந்தார்.
இதுகுறித்து தெரசா மே கூறியபோது, பிரெக்ஸிட் விவகாரத்தில் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் இந்த விவகாரத்தில் அரசு தொடர்ந்து முன்னேறி செல்லும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT