Published : 15 Nov 2017 12:37 PM
Last Updated : 15 Nov 2017 12:37 PM
தென் கொரியாவின் கடற்கரை நகரமான போகாங் கடற்கரைப் பகுதியில் இன்று (புதன் கிழமை) மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "தென் கொரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள கடற்கரை நகரமான போகாங் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 10.59 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியது. சுமார் ஒரு நிமிடம்வரை இந்த நிலநடுக்க அதிர்வுகள் நீடித்தன” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT