Published : 28 Oct 2017 04:56 PM
Last Updated : 28 Oct 2017 04:56 PM

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தாக்குதல்: 14 போலீஸார் பலி

ஆப்கானிஸ்தானில் காசா மாகாணத்திலுள்ள இரண்டு சோதனை சாவடியில் தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

 

இதுகுறித்து காசா மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஆப்கானிஸ்தானின் காசி மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு சோதனை சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) பிற்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 போலீஸார் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்” என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x