Last Updated : 25 Oct, 2017 04:42 PM

 

Published : 25 Oct 2017 04:42 PM
Last Updated : 25 Oct 2017 04:42 PM

‘ட்ரம்ப் ஒரு துரோகி’: அமெரிக்க அதிபரை நோக்கி கோஷமிட்ட நபர் கைது

வாஷிங்டனில் செனேட் சேம்பர் அருகே அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் நடந்து சென்று கொண்டிருந்த போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் அவர் அருகில் வந்து ட்ரம்ப் ஒரு துரோகி என்று கோஷமிட்டார். உடனே போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்ட 36 வயதான கிளெய்ட்டன் என்ற இந்த நபர், ட்ரம்ப் துரோகி, வரிக் குறைப்பைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள், துரோகம் பற்றியல்லவா பேச வேண்டும் என்று கூச்சலிட்டார். ட்ரம்ப் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ரஷ்யக் கொடி ஒன்றையும் அவர் சுழற்றிக்காட்டினார்.

இதே நபர்தான் செய்தியாளர்களிடையே நின்றபடி கடந்த ஜூலை மாதம் அதிபர் ட்ரம்ப் மருமகன் குஷ்னர் மீது ரஷ்யக் கொடிகளை வீசி எறிந்தார்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்புக்கு அருகில் இருந்து அவருக்கு எதிராகக் கோஷமிட்ட கிளெய்ட்டன் கைது செய்யப்பட்டுள்ளார், விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x