Published : 06 Oct 2017 04:51 PM
Last Updated : 06 Oct 2017 04:51 PM

ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி

ஜெர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியில் ஹம்பெர்க் நகரில் சேவியர் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனனர். பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பல இடங்களில் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வனவிலங்கு சாரணலயங்கள் பல சேவியர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்லதால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது என்றும் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x