Last Updated : 07 Oct, 2014 11:58 AM

 

Published : 07 Oct 2014 11:58 AM
Last Updated : 07 Oct 2014 11:58 AM

ஸ்பெயினில் செவிலியருக்கு எபோலா பாதிப்பு

எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஸ்பெயின் நாட்டு பெண் செவிலியருக்கு எபோலா தொற்று ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள எபோலா நோய், அதன் அண்டை நாடுகளிலும் பரவி வருகிறது.

இந்த நிலையில், ஸ்பெயின் செவிலியர் ஒருவருக்கு எபோலா நோய் தாக்குதல் உள்ளது உறுதியாகியுள்ளது. அவர் தற்போது தலைநகர் மேட்ரிடில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் செவிலியர், எபோலா நோய்க்கு சிகிச்சை பலனின்றி பலியான ஸ்பெயின் பாதிரியார் கார்ஸியா வியேஜோவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவ குழுவில் சில நாட்கள் இடம்பெற்றதாக சினுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, எபோலா நோயால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பாதிரியார் கார்ஸியா வியேஜோ செப்டம்பர் 25-ஆம் தேதில் மேட்ரிடில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x