Last Updated : 26 Nov, 2015 04:25 PM

 

Published : 26 Nov 2015 04:25 PM
Last Updated : 26 Nov 2015 04:25 PM

ரஷ்ய ஹெலிகாப்டர் வெடித்து 15 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாயினர்.

இதுதொடர்பாக அந்நாட்டு மண்டல போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தலைநகர் மாஸ்கோவிலிருந்து 2,800 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு சைபீரியாவின் இகர்கா விமான நிலையத்திலிருந்து எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. 22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் அப்பகுதியில் உள்ள எண்ணெய் பம்பிங் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட 15 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x