Published : 12 Oct 2013 12:07 PM
Last Updated : 12 Oct 2013 12:07 PM

பைலின், இந்தியாவை தாக்கும் கடுமையான புயல்: அமெரிக்கா எச்சரிக்கை

'பைலின்', கடந்த 14 ஆண்டுகளில் இந்தியாவை தாக்கும் கடுமையான புயல் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஹவாய் தீவுகளில் பேர்ல் துறைமுகத்தில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் புயல் எச்சரிக்கை மையம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், 1999ல் ஒடிசாவை தாக்கிய புயல் சுமார் 9000 உயிர்களை பலி வாங்கியது. இதையும் தாண்டி, இன்று தாக்கவிருக்கும் 'பைலின்' புயல் அதிக சக்தி வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கடுமையான புயல்களில் 27% புயல்கள் வங்கக்கடலில் தான் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x