Last Updated : 23 Oct, 2015 10:05 AM

 

Published : 23 Oct 2015 10:05 AM
Last Updated : 23 Oct 2015 10:05 AM

பெருமை .. சிறுமை .. பொலிவியா - 7

ஈரான் மற்றும் கியூபாவைப் பொறுத்தவரை தனது பழைய கசப்புணர்ச்சியை சமீப காலமாக குறைத்துக் கொண்டு வருகிறது அமெரிக்கா. அந்தவிதத்தில் தங்கள் நாட்டுடனும் அமெரிக்கா நல்லுறவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உண்டு என்று கருதுகிறார் மொரேல்ஸ்.

ஒரு காலத்தில் அமெரிக்காவும், பொலிவியாவும் கசப்புகளை எக்கச் சக்கமாக வளர்த்துக் கொண்ட தைப் பார்த்தோம். 2008-ல் இருநாடு களும் தங்கள் தலைநகரங்களில் இருந்த பிற நாட்டின் தூதரகங் களை இழுத்து மூடின. ‘‘எதிர்க்கட்சி களுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஆட்சியிலிருந்து நீக்க திட்டம் போடுகிறார்’’ என்று குற்றம்சாட்டி அமெரிக்க தூதர் பிலிப் கோல்டு பெர்க் என்பவரை பொலிவியாவி லிருந்து வெளியேற்றினார் மொரேல்ஸ். பதிலுக்குச் அமெரிக் காவும் பொலிவியத் தூதரை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றியது. இனி ‘அமெரிக்க போதை மருந் துக்கு எதிரான நிர்வாகம்’ தனது செயல்பாடுகளை பொலிவியாவில் நடத்தமுடியாது என்று கூறினார் மொரேல்ஸ்.

அதுமட்டுமல்ல செப்டம்பர் 2014ல் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்குழுவில் ‘ஒபாமா ஒரு சர்வாதிகாரிபோல நடந்து கொள்கிறார்’ என்று கூறினார். எனினும் வீண்பகை என்பது எதிரிகளுக்கும், தீவிரவாதிகளுக் கும்தான் வாய்ப்பு கொடுக்கும் என்பதை இரு நாடுகளுமே உணரத் தொடங்கி இருக்கின்றன.

2013-ல் பொலிவியாவில் நடைபெற்ற கணக்கெடுப்பின் முடிவு இப்படி இருந்தது. 55 சதவீத மக்கள் அமெரிக்காவுடன் இணக்கம் காட்டலாம் என்று கருத்து தெரிவித்தனர். 29 சதவீதம் பேர் அமெரிக்காவிடம் நட்பு பாராட்ட வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோவும் இணைந்து அளித்த கூட்டறிக்கை பொலிவியாவுக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது. ‘‘சிக்கல் இல்லாத தூதர உறவுகளை மேற் கொள்வோம்’’ என்று அந்தக் கூட்டறிக்கையில் கூறியிருக் கின்றன அந்த இரு நாடுகளும்.

‘‘முன்பெல்லாம் கியூபாவுட னும், ஈரானுடனும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எங்களிடம் அமெரிக்கா கூறுவது வழக்கம். இப்போது அந்த இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவு கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இது வியப்பான ஒன்றுதான்’’ என்று தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் மொரேல்ஸ். கூடவே ‘‘உலக நாடு களின் கண்ணோட்டங்கள் மாறிவரும்போது பொலிவியாவில் மட்டும் மாற்றங்கள் ஏற்படாமல் இருக்குமா? ’’ என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவும், பொலிவியா வும் நல்லுறவு கொள்ளுமா? அது உண்மையானதாகவே இருக்குமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமெரிக்க உறவு ஒருபுறமிருக்க தனது ஆட்சியில் வேறு சில மாற்றங்களையும் கொண்டு வந்தார் மொரேல்ஸ்.

வெளிநாட்டு மோகத்தைக் குறைக்கும் வகையில் உள்ளூர் பொருள்களை அதிகம் சந்தைப் படுத்தினார். அந்தந்த வட்டார ஆட்சியாளர்களுக்கு அதிக சுயாட்சி கொடுத்தார்.

வழக்கமான தேசியக் கொடி யோடு வானவில் வண்ணங்களைக் கொண்ட ஒரு கொடியையும் முக்கிய சமயங்களில் பறக்க வைத்தார். இது பொலிவியாவுக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத் தின் அறிகுறி என்றார்.

பொலிவியாவின் செல்வந்தர் களுக்கு மொரேல்ஸின் ஆட்சி முறை பிடிக்கவில்லைதான். எனினும் எண்ணிக்கையில் அவர்கள் அப்படி ஒன்றும் அதிக மானவர்களாக இல்லை. மொரேல் ஸின் சோஷலிஸ சிந்தனைகள் நாட்டின் பொருளாதாரத்தை வருங் காலத்தில் அழித்துவிடும் என்று கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொலிவியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாகாணம் சான்டா க்ரூஸ். இந்தப் பகுதி வளமானது. இதில் வசிப்பவர்கள் தான் மொரேல்ஸின் பொருளா தாரக் கொள்கைகளை அதிகம் விமர்சித்தார்கள். ஆனால் சமீபகால மாக இவர்களுக்கும், மொரேல் ஸுக்கும் கூட ஓரளவு நல்லுறவு தொடங்கியுள்ளது. நாடு முன்னேறு கிறது என்பதைக் கண்டதும் மொரேல்ஸுக்கான மரியாதை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு..

300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு சாலையை நாட்டில் அமைக்கத் திட்டமிட்டார் மொரேல்ஸ். பொலிவியாவின் பல பகுதிகளும் இதனால் பலன் பெரும் என்று கருதினர். ஆனால் நிலம் கையகப்படுத்துதல் என்ற கோணத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்தன. இதன் கார ணமாக மொரேல்ஸ் அந்தத் திட்டத் தைக் கைவிட்டார். ‘‘பொலிவி யாவின் முன்னேற்றத்துக்கு மிகவும் வழிவகுக்கக்கூடிய ஒரு திட்டத்தை நான் கைவிடுவதில் எனக்கு மிகுந்த வருத்தம்’’ என்றார்.

நாட்டை இரண்டாகப் பிரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு மொரேல்ஸ் மீது உண்டு. காரணம் பொலிவியாவில் ஐரோப்பியர்களுடன் உள்ளூர்வாசி களுக்கு ஏற்பட்ட தொடர்பில் உண் டான கலப்பின மக்களும் பொலிவி யாவில் கணிசமாக உண்டு. மொரேல்ஸின் ஆட்சி மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை என்று கூறி தங்களை ஒதுக்கு வதாக இவர்கள் கருதுகிறார்கள். ஒன்றிணைந்து இருந்தவர்களை தனது செய்கைகளால் மொரேல்ஸ். பிளவுபடுத்துகிறார் என்கிறார்கள் இவர்கள்.

நாட்டின் முக்கியமான துறை களை மட்டும் தனது அரசின் வசம் வைத்துக் கொண்டிருக்கிறார் மொரேல்ஸ். இவற்றில் வெளியுறவு, நிதி ஆகியவை உண்டு. மற்றபடி பல துறைகளுக்குத் தன்னாட்சி வழங்கி விட்டார்.

உலக அளவில் தன்னைப் போலவே இடதுசாரிக் கொள் கைகள் கொண்ட லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x