Last Updated : 19 Dec, 2015 10:57 AM

 

Published : 19 Dec 2015 10:57 AM
Last Updated : 19 Dec 2015 10:57 AM

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 17

1971ல் புதிதாக ஒரு கொடி உருவானது. அது ஆஸ்திரேலிய பழங்குடியினரின் கொடி (Australia’s Aborigingal Flag).

இந்தக் கொடிக்கு தனி மகத் துவம் கிடைத்தது. பழங்குடி இனத் தைச் சேர்ந்த ஹரால்ட் தாமஸ் என்பவர் இதை வடிவமைத்தார். (இதற்கான காப்புரிமையைகூட அவர் பெற்றிருக்கிறார்). இந்தக் கொடி இரண்டு பட்டைகள் கொண் டது. மேல் பாதியில் கருப்பு நிறம், கீழ் பாதியில் சிகப்பு நிறம். நடுவே மஞ்சள் வட்டம். இதில் கருப்பு என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்களைக் குறிக்கிறது. சிகப்பு என்பது பூமியைக் குறிக் கிறது. மஞ்சள் வட்டம் மக்களுக்கு வாழ்வு கொடுத்துக் காக்கும் சூரியனைக் குறிக்கிறது.

இந்தக் கொடியை தேசியக் கொடியாக அங்கீகரிக்கவில்லை. என்றாலும் அரசு விழாக்களில்கூட தேசியக் கொடியோடு இந்தக் கொடியும் ஏற்றப்படுகிறது.

சிட்னியில் ஒலிம்பிக்ஸ் நடை பெற்றபோது, அதற்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றார் ஆஸ்திரேலிய வீராங் கனை கேத்தி ஃப்ரீமேன். அவர் வெற்றி பெற்றதில் அதிர்ச்சி யில்லை. ஜெயித்தவுடன் மைதானத்தை அவர் வலம் வர, அப்போது அவர் கைகளில் இரண்டு கொடிகள். ஒன்று தேசியக் கொடி. இன்னொன்று மேலே குறிப்பிட்ட அபாரிஜினல் கொடி.

பொதுவாக ஒலிம்பிக்ஸ் போட்டி யில் கலந்து கொள்ளும் ஒருவர் தன் தேசியக் கொடி அல்லாத வேறொரு கொடியைக் கையில் ஏந்தி வருவது புதுமை. அதோடு அது அந்த நாட்டை அவமானப்படுத்தும் காரியம் என்றும் கருதப்படும் (கேத்தி ஃப்ரீமேன் அதற்கு முன் ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில்கூட இந்த இரண்டு கொடிகளுடன் வலம் வந்தார்).

இரண்டு கொடிகளையும் தாங்கி வர கேத்தி அனுமதிக்கப்பட்டார். அபாரிஜின் இனத்தினருக்குப் பூசப்பட்ட மருந்து அது. பல துறை களிலும் முன்னேறிய அபாரி ஜின்கள் உண்டு. என்றாலும் அந்த இனங்களைச் சேர்ந்த பலருக்கும் அரசின் கல்வி மையங்கள் ஆகியவை எட்டியபாடில்லை. இதற்கு எதிர்ப்பாகத்தான் அந்தப் போராட்டம். அந்த ஸ்பெஷல் கொடிச் சலுகை.

போதாக்குறைக்கு சிட்னி ஒலிம் பிக்ஸுக்கான கட்டுமானப் பணி களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலத்தில் பெரும்பாலும் அபாரிஜின்கள் வசிக்கும் இடங்கள் என்பது இவர்களது பெரும் கோபம். 'சிட்னி ஒலிம்பிக்ஸில் நாங்கள் கலந்து கொள்ளப் போவ தில்லை. அதுமட்டுமல்ல.. எங்கள் உணர்வுகளுக்கும், போராட்டத் துக்கும் ஆதரவளிக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள கறுப்பர்கள் மற்றும் பழங்குடியினங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எங்கள் நாட்டில் நடக்கும் ஒலிம் பிக்ஸில் கலந்து கொள்ள வேண்டா மென்று வேண்டுகோள் வைக்கி றோம்' என்று இவர்கள் அறிக்கைவிட்டனர்.

ஆஸ்திரேலிய அரசு ஆடிப் போனது. பல சமாதான முயற்சி களை மேற்கொண்டது. விதவித மான உறுதிமொழிகளை அளித்தது. இறுதியில் ஏற்பட்ட உடன்பாட்டின் படிதான் சிட்னி மைதானத்தில் துவக்கவிழாவன்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்று பெரும் கெளரவம் அபாரிஜினான கேத்தி ப்ரீமேனுக்கு வழங்கப்பட்டது. இரட்டைக் கொடி அனுமதியும் வழங்கப்பட்டது.

விளையாட்டில் பல சாதனை களை நிலைநாட்டிய தங்கள் நாடு, இந்த உரிமையைத் தங்களுக்கு அளித்ததில் ஓரளவு சமாதான மானார்கள் அபாரிஜின்கள்.

1972ல் நான்கு பழங்குடியின ஆண்கள் கான்பெர்ராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் ஒரு பெரிய கூடாரக் குடையை விரித்து வைத்தனர். அதில் ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டினார்கள. அந்தப் பலகையில் ‘அபாரிஜினல் தூதரகம்’ என்று இருந்தது. இதற்கு 2000 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அங்கு சென்று தெரிவித்தனர்.

காவல்துறை பரபரப் பாகச் செயல்பட்டது. கூடாரம் கிழிக்கப்பட்டது. உள்ளிருந்த வர்கள் வெளியே தள்ளப்பட்டனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அன்று மாலையே பல்வேறு தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பப்பட, அரசின் நடவடிக் கைக்குப் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூடாரம் கிழிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் அழுத்தமாகவே இருந்தது. பாராளுமன்றத்துக்கு எதிர்ப்புறம் இருந்த நிலத்தில், அதன் சொந்தக்காரரின் அனுமதி யுடன் புதிய ‘அபாரிஜினல் தூதரகம்’’ திறக்கப்பட்டது. அதா வது எந்த அளவுக்குத் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதை இதன் மூலம் பழங்குடியினர் உணர்த்தினார்கள். இந்தச் செயல் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் 2005 ஆகஸ்டில் அரசு ஓர் அறி விப்பை வெளியிட்டது. அபாரிஜின் களின் கூடாரத் தூதரகம் குறித்து மறுபரிசீலனை செய்யப் படும். வருங்காலத்தில் அது எப்படி அரசோடு செயல்பட லாம் என்பதைப் பற்றி முடிவெடுக் கப்படும்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x