Last Updated : 16 Dec, 2015 10:11 AM

 

Published : 16 Dec 2015 10:11 AM
Last Updated : 16 Dec 2015 10:11 AM

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 16

கடந்த 1950-ல் மெல்போர்னில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. அது நாடெங்கும் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சிகளில் அப்போதே ஒளிபரப்பப்பட்டது. அடுத்த பத்து வருடங்களில் சிட்னி யிலும் மெல்போர்னிலும் உள்ள 70 சதவீத வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இடம் பெற்றது.

1966-ல் ஒரு திருப்புமுனை. ஐரோப்பியர்கள் அல்லாத தாற் காலிக குடியேறிகளும் ஆஸ்திரேலி யாவின் நிரந்தரக் குடிமக்களாகும் வகையில் சட்டம் திருத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆஸ்திரேலிய குடி மக்களாக என்ன வழிமுறையோ அதுவேதான் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கும் நடைமுறை என்றது அரசு. ஆக ‘வெள்ளையர் ஆஸ்திரேலியக் கொள்கை’’ (White Australia Policy) ஒரு முடிவுக்கு வந்தது.

ஜப்பானுக்கும் ஆஸ்திரேலியா வுக்கும் உள்ள உறவுகள் ஓரளவு சுமுகமாயின. இதற்குக் காரணம் அரசியல் அல்ல, வணிகம். ஆஸ்திரேலியாவின் மிக அதிகமான இறக்குமதி ஜப்பானுக் கும் என்று ஆனது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஒருவர் உலக சரித்திரத்திலேயே ஒரு மிக வித்தியாசமான ‘சாதனையை’ செய்தார். தலைவர் இறந்ததை ‘இன்னார் மறைந்துவிட்டார்’’ என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் ‘உண் மையாகவே’ இந்தப் பிரதமர் மறைந்தார்.

1966 ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியாவின் பதினேழாவது பிரதமராகப் பதவியேற்றவர் ஹெரால்டு ஹோல்ட். 1967 டிசம்பர் 17 அன்று தனது சில நண்பர் களுடனும், இரண்டு பாதுகாப்பாளர் களுடனும் மெல்போர்னுக்குப் பயணம் செய்தார். அங்கு அவருக்குப் பிடித்த செவியோட் என்ற கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு அலைகளின் வேகம் அதிகமாகவே இருந்தது. அந்தப் பகுதி ஏற்கனவே சிலரைக் காவு வாங்கிய பகுதியும்கூட. அங்கு ஹோல்ட் நீச்சலடிக்கத் தொடங்கினார். நண்பர்களின் எச்சரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை.

திடீரென்று பிரதமர் மற்றவர் கண்களுக்குப் புலப்படவில்லை. எங்கே மறைந்தார்? அபாய மணிகள் ஒலிக்கப்பட்டன. கடற்படை, வான் படை எல்லாமே அந்தப் பகுதியில் குவிந்தன. ஆனால் ஹோல்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹோல்ட் இறந்ததாக நம்பப்படுகிறார் என்று அரசு அறிவித்தது. துணைப் பிரதமர் ஜான் மேக்ஈவன் தாற்காலிகப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

ஹோல்ட்டின் மறைவு சிலருக்குப் பெரும் வியப்பை அளித்தது. ஏனென்றால் அவர் ஒரு மிகச் சிறந்த நீச்சல் வீரர். தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் இருக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

இப்படி விமர்சித்தவர்களுக்கு வேறு சில கோணங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. சில மாதங்களாகவே அவருக்கு வலது தோள்பட்டையில் கடும் வலி இருந்திருக்கிறது. அதனால் அவர் டென்னிஸ் ஆடக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். எனினும் ஒரு வி.ஐ.பி. வித்தியாச மான முறையில் இறக்கும்போது பலவித யூகங்களும் எழுவது இயல்புதானே. ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டார் என்றனர் சிலர்.

இந்தக் கோணத்தை மையப் படுத்தி Who killed Herald Holt என்று ஒரு ஆவணப் படத்தை தயாரித்தார் பத்திரிகையாளர் ரேமார்டின் என்றவர். ஆனால் ஹோல்டின் மகன் இதைக் கடுமையாக மறுத்தார். இதைத் தொடர்ந்து அதிகாரபூர் வமான அரசு விசாரணை நடந்ததா? இல்லை. அது நேரத்தையும், பணத்தையும், வீணாக்கும் முயற்சி என்று அறிவிக்கப்பட்டது!

ஆஸ்திரேலியாவை பொறுத்த வரை வியட்நாம் போர் என்பது 1972-ல் முடிவடைந்து விட்டது. இதற்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆஸ்திரேலியாவில் பலவித எழுச்சி கீதங்கள் உருவாயின. பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பல நூல்கள் அச்சிடப்பட்டன. இவையெல்லாமே வியட்நாம் புத்தகத்தில் ஆஸ்திரேலியா வுக்கான பங்களிப்பின் சிறப்பு குறித் ததாக இருந்தது. இவற்றின் பின்ன ணியில் அமெரிக்கா இருந்தது.

அமெரிக்க ராணுவத்தைவிட ஆஸ்திரேலிய ராணுவத்தை இந்த யுத்தத்தில் அமெரிக்கா கொஞ்சம் அதிகமாகவே நம்பியது எனலாம். காரணம் வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க ராணுவத்தினருக்கு ஒரு மனச்சோர்வு உண்டாகி இருந்தது.

‘’நம் நாட்டுக்கு நேரடித் தொடர்பு இல்லாத ஒரு விஷயத்துக்காக எங்கோ தொலைதூரத்திலிருந்து போரிடுகிறோமே’’ என்பதுதான் அந்த மனச்சோர்வுக்குக் காரணம். தவிர அமெரிக்க ராணுவத்தில் ஆங்காங்கே வெள்ளை மற்றும் கருப்பர் இனச் சிப்பாய்களுக்கு நடுவே இனமோதல்கள் நடைபெற் றன. இந்தப் பிரச்சினையெல்லாம் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களிடம் இல்லாமல் இருந்தது.

ஆனால் இது ஒரு கட்டம் வரையில்தான். பொதுவாக ஆஸ்திரேலிய ராணுவம் மிக நீண்ட வருடங்களுக்கு எந்த யுத்தத்திலும் அதுவரை ஈடுபட்டதில்லை. இதன் விளைவு வெளிப்பட்டது.

1970-களில் வியட்நாமிலிருந்து ஆஸ்திரேலிய ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாடு வியட்நாம் போரில் பங்கு கொள்வது அனாவசியம் என்று நினைத்ததுதான். 1970-ல் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வர்கள் வீதி ஊர்வலம் போனார்கள் - ‘‘நமது வீரர்களை வியட்நாம் போரில் ஈடுபட வைக்கக் கூடாது’’ என்று.

பின்னொரு காலகட்டத்தில் போரிலிருந்து ஆஸ்திரேலியா தன் ராணுவத்தை விலக்கிக் கொண்டதோடு வேறொரு விதத்தி லும் வியக்க வைத்தது. வியட்நாமிலிருந்து வந்த அதிகாரிகளை ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிக் குள் அனுமதித்தார் அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமரான மால்கம் ஃப்ரேஸர்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x