Last Updated : 15 Dec, 2015 09:58 AM

 

Published : 15 Dec 2015 09:58 AM
Last Updated : 15 Dec 2015 09:58 AM

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 15

கடந்த 1940-களில் இரண்டாம் உலகப்போர். ஜப்பானிய ராணுவம் தென்புறமாகவும் பாய்ந்தது. பிரிட்டனை மட்டுமே தனது பாதுகாப்புக்கு நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தது ஆஸ்திரேலியா. தருணம் பார்த்து அமெரிக்கா அங்கு நுழைந்தது. அமெரிக்க ராணுவத் தளபதி டக்ளஸ் மாக் ஆர்தர் இந்த விஷயத்தில் முக்கியப் பங்கு ஆற்றினார்.

1941-ம் வருடத்தின் இறுதி நாளில் தனது மக்களுக்கான புத்தாண்டு அறிவிப்பில் ஆஸ்திரேலியப் பிரதமர் கர்டின் கூறியது இது. ‘’எந்தவித தயக்கமுமின்றி நான் தெளிவாகவே அறிவிக்கிறேன். நாங்கள் அமெரிக்காவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் காலகாலமாக பிரிட்ட னுடன் நமக்குள்ள தொன்மையான தொடர்பு தொடரும்’’.

இந்த அறிவிப்பை அப்போது கடுமையாக விமர்சித்தவர்கள் இருந்தனர். எனினும் அமெரிக்கா வின் வரவு அழுத்தமாகவே இருந்தது.

1908-ல் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆல்ஃப்ரட் டீகின் எப்போதுமே புதுமையான தன்னிறைவு பெற்ற நாடாக ஆஸ்திரேலியா விளங்க வேண்டுமென்று நினைத்தவர். முக்கியமாக ஆஸ்திரேலியக் கடற்படை சுயமானதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார் (இது பிரிட்டனுக்கு உவப்பானதாக இல்லை என்பது வேறு விஷயம்).

இவர் அமெரிக்காவின் கடற் படையின் சிறப்புக் கப்பல்களை (Great White Fleet) ஆஸ்திரேலி யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது அந்தக் கப்பல்கள், தங்கள் மாண்பைப் பறைசாற்றும் வகையில் உலகத் தைச் சுற்றி வந்துகொண்டிருந்தன.

அமெரிக்கா இந்த அழைப்பை மகிழ்வுடன் ஏற்றது. அந்தக் கப்பல்கள் மெல்போர்ன், சிட்னி, அல்பானி ஆகிய நகரங்களில் நின்றன.

ஆஸ்திரேலியாவைச் சுற்றி யுள்ள கடற்பகுதியை பலப்பல ஆண்டுகளுக்குப்பிறகு பிரிட்டன் அல்லாத கப்பல்கள் தொட்டன. இது ஒரு பெரும் திருப்புமுனையாகக் கருதப்பட்டது.

பின்னர் ஆஸ்திரேலியா தானா கவே சில நவீன போர்க்கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங் கியது. இந்த முடிவு பிரிட்டனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மாக் ஆர்தர் என்பவர் கூட்டு நாடு களின் ஒன்றிணைந்த ராணுவத் தளபதிகளில் ஒருவராக நியமிக் கப்பட்டார். இவரது தலைமை யில் ஆஸ்திரேலிய ராணுவத்தி னர் பலரும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். தனது தலைமையகத் தையேகூட பிரிஸ்பேனில் அமைத்துக் கொண்டார் அவர்.

காலப்போக்கில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 11 ஆஸ்தி ரேலிய குடிமக்களும் இறந்தனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதத் துக்கு எதிராக அமெரிக்காவுடன் அழுத்தமாகவே கைகோர்த்துக் கொண்டது ஆஸ்திரேலியா.

ஜார்ஜ் புஷ் ஆட்சிக்கு மிகவும் ஆதரவாகச் செயல்பட்டார் ஆஸ்தி ரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு. 2001-ல் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், 2003ல் ஈராக்கை அமெரிக்கா ஆக்ர மித்தபோதும் ஆஸ்திரேலியாவின் ஆதரவு தொடர்ந்தது. இதற்கு பதில் மரியாதையாக 2004-ல் புஷ் ஆட்சி ஆஸ்திரேலியாவுடனான ஒரு தடையற்ற வணிக ஒப்பந்தத்துக்கு உடன்பட்டது (என்றாலும் பிறகு ஆஸ்திரேலியப் பிரதமரான கெவின் ருட் என்பவர் இராக்குக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய ராணுவத்தினர் 2008-ல் வாபஸ் பெறப்படுவார்கள் என்று கூறியது வேறு விஷயம்).

அமெரிக்காவுடனான நெருக்கம் இப்படியிருக்க, பிரிட்டன் ஆஸ்திரேலியாவிடம் தனது உரிமைகளை அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டது.

காலப்போக்கில் தனது அணு ஆயுதங்களை சோதித்துப் பார்க்க ஆஸ்திரேலியா தகுந்த களம் என்று பிரிட்டன் தீர்மானித்தது. அங்குதான் காலி இடம் உண்டே.

தெற்கு ஆஸ்திரேலியாவில் மரலிங்கா என்ற பகுதி பிரிட்டனின் அணு ஆயுதச் சோதனைகளுக்குக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால் அங்கு அனங்கு என்ற பழங்குடி மக்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் வழக்கம்போலவே துரத்தியடிக்கப் பட்டனர்.

என்னதான் தன்னிறைவு பெற்றா லும், ஆஸ்திரேலியாவில் ராஜ வம்சத்திடம் உண்டான ஈர்ப்பு தனிதான். 1954-ல் ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு மாத சுற்றுலாவில் வந்த போது, மக்களில் முக்கால்வாசி பேர் அவரை ‘தரிசனம்’ செய்தனர்.

பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலி யாவுக்குக் குடியேறுபவர்களுக்கு மட்டுமே ராஜமரியாதை என்ற போக்கு மாறியது. ஐரோப்பா விலிருந்து யார் வந்தாலும் முன்னுரிமை என்ற அளவுக்குத் தன் போக்கை தளர்த்திக் கொண்டது ஆஸ்திரேலியா. புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் புதிய குடியேற்றப் பகுதிகள் உருவாவதற்கும் இது பெரிதும் உதவும் என்று நம்பப்பட்டது.

1942-ல் சிங்கப்பூர் வீழ்ந்தது. 15000 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் ஜப்பானால் ராணுவ கைதி களாக்கப்பட்டனர். முதல் முறை யாக அபாரிஜின்களும் ஜப்பா னுக்கு எதிராக களத்தில் இறங்கி னார்கள்.

போரின் விளைவாக வேறொரு எதிர்பாராத திருப்பம் உண்டானது. வேலைக்குச் செல்ல போதிய ஆட்கள் இல்லாததால் பெண்கள் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர் களின் மதிப்பு கூட, சின்னதாக ஒரு பெண்கள் ராணுவமும் அங்கே உருவானது.

இரண்டாம் உலகப்போர் முடிவ தற்கு சில வாரங்களுக்கு முன் பிரதமர் குர்டின் தனது அலுவலகத் தில் இறந்துவிட, அவரது மிக நெருங்கிய நண்பரான பென் சிஃக்ப்லே அடுத்த பிரதமர் ஆனார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x