Last Updated : 23 May, 2015 04:55 PM

 

Published : 23 May 2015 04:55 PM
Last Updated : 23 May 2015 04:55 PM

பாகிஸ்தானிடமிருந்து முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ்.

பாகிஸ்தானிடமிருந்து தங்களது முதல் அணு ஆயுதத்தை வாங்க உள்ளதாக ஐ.எஸ். பகிரங்கமாக அறிவித்துள்ளது.

சிரியா மற்றும் இராக்கில் தாக்குதல் நடத்தி ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பிரிட்டிஷ் புகைப்பட பத்திரிக்கையாளர் ஜான் கான்டைல் என்பவரை 2 வருடங்களுக்கும் மேலாக பிணைக் கைதியாக வைத்துள்ளது.

இந்த நிலையில் ஜான் கான்டைல் தோன்றி பேசும் 'கொஞ்சம் செவி கொடுங்கள்' என்று தலைப்பிடப்பட்ட வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. அதில், தங்களது இயக்கத்தின் முதல் அணு ஆயுதம் பாகிஸ்தானிடமிருந்து அடுத்த 12 மாதங்களில் வாங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடியோவில், தங்களை இந்த உலகிலேயே மிகவும் மோசமான ஆபத்து வாய்ந்த பயங்கரவாத இயக்கமாக ஐ.எஸ். அறிவித்துக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x