Last Updated : 10 Oct, 2015 03:00 PM

 

Published : 10 Oct 2015 03:00 PM
Last Updated : 10 Oct 2015 03:00 PM

துருக்கி தலைநகரில் குண்டுவெடிப்பு: 20 பேர் உயிரிழப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் டோகன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமைதிப் பேரணிக்காக மக்கள் திரண்டிருந்த இடத்தில் அந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்த இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறும்போது "15 பேரது உடல்கள் சிதறிக் கிடப்பதைப் பார்தேன். ஆங்காங்கே மனித உடல்களின் பாகங்கள் கிடக்கின்றன" என்றார்.

சம்பவம் குறித்து பிரதமர் அஹ்மெட்டுக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சர் விளக்கியுள்ளார். இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x