Published : 31 Aug 2016 04:41 PM
Last Updated : 31 Aug 2016 04:41 PM
மெக்சிகோ அதிபர் பினா நிய்ட்டோவின் அழைப்பை ஏற்று மெக்சிகோவுக்கு புதன்கிழமை பயணம் செல்ல உள்ளதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள மெக்சிகோ அதிபர் பினா நிய்ட்டோவின் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். அவரை சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் ட்விட்டை தொடர்ந்து மெக்சிகோ அதிபர் பினா நியோடோவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தனது அழைப்பை டிரம்ப் ஏற்று கொண்டுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவுக்கு குடியேறுபவர்கள் பற்றி வெறுப்புப் பேச்சுகளை பேசி வந்தார். குறிப்பாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களை தாக்கிப் பேசி வந்தார்.
"அமெரிக்காவில் தங்கும் மெக்சிகோவினரால்தான் இங்கு பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது. மெக்சிகோவினர் போதை கடத்தலில் ஈடுபடுபவர்கள். மெக்சிகோ நாட்டினர் அமெரிக்கா வருவதை தகுக்கும் வகையில் அமெரிக்கா மெக்சிகோவுக்கு இடையே தடுப்பு சுவர் அமைக்கப்படும்" என்று பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் இரு அதிபர் வேட்பாளர்களையும் நல்லெண்ண நோக்கில் சந்திப்பதற்காகவே மெக்சிகோ சார்பில் அழைப்பு விடப்பட்டிருப்பதாக மெக்சிகோவின் அரசு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT