Published : 06 Jul 2017 10:29 AM
Last Updated : 06 Jul 2017 10:29 AM

உலக மசாலா: 48 ஆண்டுகளில் 17,500 மரங்கள் நட்ட மாமனிதர்!

மரக்கன்று நடா விட்டாலும் எனக்குத் தூக்கம் வருவதில்லை. மறுநாள் இரண்டாக வைத்துவிடுவேன். சின்ன வயதிலிருந்தே ஏனோ மரக்கன்று நடுவதில் எனக்கு ஆர்வம். அரசாங்க நிலங்களில்தான் மரக்கன்று நடுகிறேன் என்பதால் பெரும்பாலும் அவற்றை யாரும் வெட்டுவதில்லை. அப்படியே வெட்ட வந்தாலும் பொதுமக்களே தடுத்து நிறுத்தி விடுவார்கள். விலங்குகள், பறவைகள் போன்று எல்லா உயிரினங்கள் மீதும் எனக்கு அன்பு இருக்கிறது. மரங்கள் மீது சற்றுக் கூடுதல் அன்பு. நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை எனது சொற்ப வருமானத்தை வைத்து நடத்துவது சிரமம். அதிலும் மரங்களுக்குச் செலவு செய்கிறேன் என்பதால் மனைவிக்குக் கொஞ்சம் வருத்தம். என்றாலும் அவர் என்னைத் தடுத்ததில்லை. என்னைப் பற்றி அறிந்த அரசாங்கம், கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இடத்தைக் கொடுத்து, தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறது.

அதனால் வாடகை பிரச்சினை இல்லை. இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களும் சம்பாதிக்கிறார்கள். நான் இப்போதும் என் தேவைகளுக்காக ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன்” என்கிறார் அப்துல் சமத்.“எங்கள் அப்பா மரக்கன்று நடுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட மரங்கள் எல்லாம் இன்று வளர்ந்து, நிழலையும் கனிகளையும் கொடுக்கின்றன” என்கிறார் இவரது மகன். ‘தி டெய்லி ஸ்டார்’ என்ற அமைப்பு அப்துல் பற்றிய ஆவணப்படம் வெளியிட்டு, விருதும் 82 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

“ஒருநாள் வங்கதேசத்தை சேர்ந்த 60 வயது அப்துல் சமத் ஷேக், ரிக்‌ஷா ஓட்டும் தொழிலைச் செய்துவருகிறார். நீண்ட காலமாக இவர் செய்துவரும் சிறிய விஷயம், இன்று பெரிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. 12 வயதிலிருந்து தினமும் ஒரு மரம் நடுவதை இவர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 17,500 மரங்களை நட்டு, சிறிய காட்டையே உருவாக்கியுள்ளார். ஃபரித்பூரில் வசிக்கும் இவர், நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார். இதில் தினமும் ஒரு மரக்கன்றை விலைக்கு வாங்கி, நட்டு வைக்கிறார்.

48 ஆண்டுகளில் 17,500 மரங்கள் நட்ட மாமனிதர்!

மெக்சிகோவின் கோஸுமெல் பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பணம் கொடுத்த மாணவர்களுக்குத் தனி இடம் அரங்கில் ஒதுக்கப்பட்டது. அதில் மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அமரும் விதத்தில் மேஜைகளும் நாற்காலிகளும் அளிக்கப்பட்டிருந்தன. விழா முடிந்தவுடன் சுவையான உணவுகளும் பானங்களும் பரிமாறப்பட்டன. பணம் கொடுக்க முடியாத மாணவர்களை அரங்கின் ஒரு பகுதியில், பெரிய தடுப்புகளை வைத்து மறைத்து உட்கார வைத்தனர். அவர்கள் நின்றால் கூட விழா மேடையையோ, சக மாணவர்களையோ பார்க்க முடியவில்லை. அனைத்து விஷயங்களையும் ஒலிபெருக்கி மூலம் காதில் வாங்கிக்கொண்டனர். இந்தப் பாகுபாடு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. சிலர் புகைப்படங்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர்.

எல்லையில் சுவர் எழுப்பச் சொன்ன ட்ரம்ப்பின் கொள்கையைப் பின்பற்றுகிறார்களோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x