Published : 01 Nov 2015 11:06 AM
Last Updated : 01 Nov 2015 11:06 AM
தென்கொரியாவில் தற்கொலை எண்ணம் வருகிறவர்களுக்கான புதிய சிகிச்சை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. சவப்பெட்டிக்குள் படுக்க வைத்து, மரண அனுபவத்தை ஏற்படுத்தும் இந்தச் சிகிச்சை மிகப் பெரிய அளவில் தற்கொலைகளில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுகிறது.
தென்கொரியாவில் தினமும் 40 பேர் தற்கொலை செய்துகொள் கிறார்கள். சியோல் ஹைவோன் ஹீலிங் சென்டர் இவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் யார் வேண்டுமானாலும் இங்கே வரலாம்.
ஒரு பெரிய அறையில் வரிசையாக மேஜை, நாற்காலிகள் போடப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மேஜைக்கு அருகிலும் ஒரு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அமைதியாக நாற்காலியில் அமர வேண்டும். பங்கேற்பாளர்கள் அனைவரும் சவப்பெட்டிக்குள் படுத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு உயிலோ, தங்கள் பிரியத்துக்கு உரியவர்களுக்குக் கடைசிக் கடிதமோ எழுத வேண்டும். சத்தமாக எல்லோருக்கும் கேட்பது போலப் படிக்க வேண்டும். விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்படும். மரண தேவதை என்ற பெயரில் ஒரு பெண் அறைக்குள் நுழைவார். எல்லோரும் மீண்டும் சவப்பெட்டிக்குள் படுக்க வேண்டும். ஒவ்வொருவரின் இமைகளையும் மரண தேவதை மூடிவிடுவார். 10 நிமிடங்களில் மரணத்துக்குப் பிறகு ஒன்றுமே இல்லை என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள். ’உயிர் வாழ்தல் எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்தவர்கள் வெளியே வரலாம்’ என்று அறிவிப்பு வரும். எல்லோரும் மரணத்தில் இருந்து மீண்ட உற்சாகத்துடன் சவப்பெட்டியில் இருந்து வெளியே வருவார்கள்.
முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சை…
ரஷ்யாவைச் சேர்ந்த 6 வயது விர்சவியா போரனுக்கு இதயமும் குடலும் உடலுக்கு வெளியே உருவாகியிருக்கிறது. 10 லட்சம் மனிதர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை குறைபாடு இது. உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டிருக்கும் இதயம் மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கிறது. இதயம் துடிப்பதை நேரடியாகவே பார்க்க முடிகிறது. ’’குழந்தை பிறக்கும் போதே பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றில் இதயம் வெளியே வந்தது மிக மோசமான குறைபாடு. மருத்துவத்துக்காக அமெரிக்கா வந்தேன். ஆனால் குழந்தையின் உடல் இருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று கூறிவிட் டனர். இவள் வயிற்றில் இருந்தபோதே மருத்துவர்கள் குறைபாட்டைச் சொல்லி, இந்தக் குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றார்கள். 6 ஆண்டுகளைக் கடந்துவிட் டாள். இத்தனைப் பிரச்சி னைகள் இருந்தாலும் அற்புதமாக வரைகிறாள், பள்ளிக்குச் செல்கிறாள், பாடுகிறாள், ஆடுகிறாள். ஒரு குழந்தையாக அவள் எந்தக் குறையையும் எங்களுக்கு வைக்கவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்க்கலாம்’’ என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அம்மா டாரி போரன்.
உங்களின் நம்பிக்கை வீணாகாது டாரி போரன்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT