Published : 03 Nov 2015 10:25 AM
Last Updated : 03 Nov 2015 10:25 AM

உலக மசாலா: பூனை விலங்கு!

வீட்டில் செல்லப் பிராணி களாக வளர்க்கப்படும் விலங்குகளில் ஒன்று பூனை. குறும்பும் விளையாட்டுமாக இருப்பதால் மனிதர்களின் மனத்தில் முக்கியமான இடத் தைப் பெற்றிருக்கிறது. சமீபத் தில் எடின்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியளிக்கும் செய்தி யைச் சொல்லியிருக்கிறார்கள். அழகாகவும் ஆபத்தில்லாத தாகவும் காட்சியளிக்கும் உங்கள் செல்லப் பூனையின் கண்களில் தெரியும் பொறி, ஓர் உயிரைக் கொல்லும் உணர்வாக இருக்கலாம். சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை.

காட்டுப் பூனைகளின் குணமான ஆதிக்கம் செலுத்தும் பண்பு, உணர்ச்சிவசப்படக்கூடிய இயல்பு, தாக்குதல் தொடுக்கும் மனம் போன்றவை வீட்டுப் பூனைகளுக்கும் இருக்கும். வீட்டுப் பூனைகள் அளவில் சிறியதாக இருப்பதால் மனிதர்களைக் கொல்ல முயற்சி செய்வதில்லை. ஆனால் பூனைகளை செல்லப் பிராணி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், மற்ற விலங்குகளைக் கொன்று சாப்பிடக்கூடிய ஒரு சிறிய விலங்கை வீட்டில் வளர்க்கிறோம் என்ற கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ம்… கென்யாவில் சிங்கங்களுடன் நெருங்கிப் பழகிய ஜாய்யைக் கொன்றது சிங்கங்கள் அல்ல, மனிதர்கள்…

சீனாவின் ஸெஜியாங் பல்கலைக்கழகம் பள்ளி கல்வியில் புதிய வழிமுறைகளைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறது. பரிசோதனை முயற்சியாக ஓர் ஆரம்பப் பள்ளி வகுப்பை, பெற்றோர்கள் கவனிக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறது. வீட்டில் இருந்தபடியே தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் குழந்தைகளின் வகுப்பறைகளைப் பெற்றோர் கவனிக்கலாம். 200 பெற்றோருக்கு இந்த வசதி செய்யப்பட்டது.

‘‘என் மகள் சரியான இடத்தில் அமரவில்லை. அவள் பார்வை குறைபாடு உடையவள்’’ என்றார் ஓர் அம்மா.

‘‘கேள்விக்குப் பதில் சொன்ன என் மகனை இன்னும் ஆசிரியர் அமரச் சொல்லவில்லை. பாவம் நின்றுகொண்டிருக்கிறான்’’ என்று வருத்தப்பட்டார் ஓர் அப்பா.

‘‘வீட்டில் சரியாகப் பேசாத என் மகள், வகுப்பில் எவ்வளவு வாய் பேசுகிறாள்’’ என்று அதிசயப்பட்டார் இன்னோர் அம்மா. பெற்றோர் கவனிக்கிறார்கள் என்பதை மாணவர்களுக்கும் சொல்லிவிட்டனர். நீண்ட நேரம் குழந்தைகள் அமைதியாகத் தலை குனிந்து இருந்தனர். ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் என் பெற்றோர் கவனிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். ஆசிரியர்கள்தான் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டனர். மாணவர்களைச் சாதாரணமாகச் சொன்னால்கூட பெற்றோர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்தனர். குழந்தைகளை விளையாட்டுக்குக்கூடத் தொடவில்லை என்கிறார்கள். ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் காலப்போக்கில் நல்ல மாற்றம் வரும் என்று நினைக்கிறது பல்கலைக்கழகம். ஆசிரியர், மாணவர், பெற்றோர் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்வார்கள் என்கிறது.

முக்கியமாக, மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக மாட்டார்கள்…

இங்கிலாந்தில் நவம்பர் முதல் வாரம் சாசேஜ் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக கெவின் டர்னர் என்பவர் உலகின் விலை மிகுந்த சாசேஜை உருவாக்கியிருக்கிறார். மங்கலிட்சா பன்றி இறைச்சி, விலை உயர்ந்த பாலாடைக்கட்டி, அரிய காளான்கள் எல்லாம் சேர்த்து இந்த சாசேஜை உருவாக்கியிருக்கிறார்.

‘‘ஒரு கிலோ சாசேஜ் 70 ஆயிரம் ரூபாய். ஒரு சாசேஜ் 3,300 ரூபாய். சாதாரண சாசேஜ்களை விட 100 மடங்கு விலை அதிகம் என்னுடைய சாசேஜ். இதில் சேர்க்கப்பட்ட பன்றி இறைச்சியில் இருந்து ஒவ்வொரு பொருளும் விலை மதிப்பு மிக்கது. எளிதில் கிடைக்காதவை. அதனால் அதற்குரிய விலையைக் கொடுக்கத்தான் வேண்டும்’’ என்கிறார் கெவின் டர்னர்.

இருக்கப்பட்டவர்கள் வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான்…

மெக்சிகோவைச் சேர்ந்த லானா என்ற நாய் 5 வயது முதல் பல்வேறு மனிதர்களிடம் வளர்ந்து வந்தது. கடைசியாக வளர்த்தவர் பராமரிக்க இயலாத காரணத்தால், நாய்கள் வளர்ப்பு மையத்தில் விட்டுவிட்டார். காலை முதல் மாலை வரை லானா இடத்தை விட்டுச் சிறிதும் அசையவில்லை. மிகவும் சோர்வுடன் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தது. நாய் வளர்ப்பு மையத்தில் பணிபுரியும் டாலியா அயோப், லானாவைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் சமாதானமாகவில்லை. இரவில் கட்டாயப்படுத்தி சிறிது உணவைச் சாப்பிட வைத்தார். அதற்குப் பிறகும் லானா சோர்வுற்றே இருந்தது.

‘‘நாய் வளர்ப்பு மையத்துக்கு வந்ததில் லானாவுக்கு விருப்பமில்லை. மறுநாளே ஒரு குடும்பத்திடம் லானாவை ஒப்படைத்தேன். இப்பொழுது புதிய உரிமையாளரை ஏற்றுக்கொண்டு, சந்தோஷமாக இருக்கிறது லானா’’ என்கிறார் டாலியா.

விடுதி வாழ்க்கை யாருக்குத்தான் பிடிக்கிறது?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x