Published : 20 Dec 2015 12:17 PM
Last Updated : 20 Dec 2015 12:17 PM

உலக மசாலா: பனிக்கட்டி விடுதி

ஸ்வீடனில் 4 ஆயிரம் டன் பனிக்கட்டிகளை வைத்து தங்கும் விடுதியைக் கட்டியிருக்கிறார்கள். 50 அறைகள் கொண்ட இந்தப் பெரிய விடுதியை 2 மாதங்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். விடுதிக்குள் நுழைந்த உடனேயே 3 அடி உயரம் கொண்ட ஆப்பிரிக்க யானையின் பனிச் சிற்பம் வரவேற்கும். ஒவ்வோர் அறைக்கும் சுரங்கப் பாதையின் மூலமாகத்தான் செல்ல வேண்டும். டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை இந்த விடுதி திறந்திருக்கும். 11 ஆயிரம் மக்கள் இங்கே வந்து தங்கிச் செல்வார்கள். பனிக்கட்டிகளால் ஆன அறை, கட்டில் என்று இருந்தாலும் குளிரைத் தாங்குவதற்கான அத்தனை அம்சங்களும் இங்கே செய்யப்பட்டிருக்கின்றன. பனிச் சிற்பங்களை ரசிப்பதற்கும் பனிக் கட்டிடங்களில் தங்குவதற்கும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

துருவப் பிரதேசம் ஸ்வீடனுக்கு இடம் பெயர்ந்துவிட்டது போல இருக்கிறது!

நிறுவனம் ஒவ்வொரு ஜோடியும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறது. உறவு நீடிக்காத ஜோடிகளிடமிருந்தே அதிக வட்டியுடன் கடனை வசூலிக்கிறோம். இப்படி வசூலிப்பதை வைத்துதான் இன்னொரு ஜோடிக்கு கடன் வழங்குகிறோம். அமெரிக்காவில் அதிக அளவில் விவாகரத்துகள் நடப்பதால் எங்கள் நிறுவனம் நஷ்டமடைய வாய்ப்பில்லை’’ என்கிறார் ஸ்வான்லாவ் நிறுவனர்களில் ஒருவரான ஸ்காட் ஏவி.

‘‘எங்கள் அமெரிக்காவில் 40 முதல் 50 சதவீத தம்பதியர் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். ஸ்வான்லாவ் என்ற நிறுவனம் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ரூ.6.5 லட்சம் வரை கடனாக வழங்குகிறது. இந்தப் பணத்தை அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழும் வரை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. விவாகரத்து செய்துகொள்ளும்போது வட்டியுடன் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ்பவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. பிரிந்து செல்லும்போது தம்பதியர் இருவரும் கடனில் சரி பாதியைத் தனித் தனியாகச் செலுத்த வேண்டும். தம்பதியரில் ஒருவர், மற்றொருவரால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் கடனை வசூல் செய்ய மாட்டார்கள். முழுப் பணத்தையும் குற்றம் செய்தவரே செலுத்த வேண்டும்.

ம்… எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இப்படி ஒரு தொழிலில் இறங்க முடியும்…

ஸ்பெயினில் உள்ள சாண்டா பார்பரா தேவாலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 50 ஆண்டுகளாக இந்தத் தேவாலயம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தனியாருக்குச் சொந்தமான இந்தத் தேவாலயத்தை தற்போது திறந்திருக்கிறார்கள். தேவாலயத்தின் இரண்டு சுவர்களையும் இணைக்கும் விதத்தில் அரை வட்ட வடிவில் மரப் பலகைகளை அமைத்திருக்கிறார்கள். இதில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்கிறார்கள். யாருக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கட்டிடத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த மக்கள் திட்டமிட்டனர். தேவையான நிதியைச் சேகரித்தனர். ஸ்கேட்டிங் மையமாக மாற்றிவிட்டனர். தேவாலயத்தின் கூரையும் ஜன்னல்களும் வண்ணக் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை வெளிச்சம் விளையாட்டுக்குக் கிடைக்கிறது.

அட! நல்ல காரியம் செய்திருக்கிறார்களே!

‘‘என் அமெரிக்காவின் கன்சாசில் வசிக்கிறார் க்வென். அவருடைய இரண்டு மகள்களும் அரிய நரம்பியல் குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார்கள். இதனால் அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது. க்ளாரிக்கு 14 வயது, லோலா ஹார்லேக்கு 9 வயது. ஆனால் இருவரும் சிறிய குழந்தை போலவே இருக்கிறார்கள். இவர்களால் நடக்க முடியாது, பேச முடியாது. பார்வையும் குறைவாகவே இருக்கிறது. தினமும் வலிப்பு வருகிறது.

மகள்கள் இருவரது எடையும் சேர்த்தே 19 கிலோதான். கைக்குழந்தை போலத்தான் இவர்களைப் பார்த்துக்கொள்கிறோம். குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் நாங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறோம். சத்து மிக்க நல்ல உணவு, மருந்து போன்றவற்றால்தான் இவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் பிறந்தபோதே, பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனாலும் இத்தனை ஆண்டுகள் அவர்களை வளர்த்துவிட்டோம். என் குழந்தைகள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது எங்கள் பொறுப்பு’’ என்கிறார் க்வென்.

எவ்வளவு அற்புதமான அம்மா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x