Published : 17 Nov 2015 09:43 AM
Last Updated : 17 Nov 2015 09:43 AM

உலக மசாலா: கண்களில் கூடவா விளையாட்டு?

டலில் போட்டுக்கொள்ளும் டாட்டூ, இப்பொழுது கண்களுக் கும் பரவிவிட்டது. ஆஸ்திரேலியாவில் கண்களில் உள்ள வெண் பகுதியில் வண்ணங்களை ஊசி மூலம் செலுத்திக்கொள் கிறார்கள். இதுவரை 20 பேர் நிரந்தரமாகக் கண்களை வண்ணமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த லூனா கோப்ரா கண்களை வண்ணமாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார். ‘‘இது மிக ஆபத்தான விஷயம். வண்ணங்கள் மூலம் நிரந்தரமாகப் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது’’ என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பச்சை, நீலம், கறுப்பு, மஞ்சள் என்று விருப்பப்பட்ட நிறக் கண்களோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

கண்களில் கூடவா விளையாட்டு?

வாஷிங்டனில் வசிக்கும் 28 வயது ஹன்னா ஷா, தன் வாழ்க்கையைப் பிறந்த பூனைக் குட்டிகளைக் காப்பதற்காக அர்ப்பணித்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் பல நூறு பூனைக் குட்டிகளைக் காப்பாற்றி இருக்கிறார். ‘‘எனக்கு 12 வயதில் விலங்குகளைக் காக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. அன்று முதல் நான் இறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டேன். சின்னப் பிராணிகளில் இருந்து, சரணாலயங்களில் இருக்கும் பெரிய பிராணிகள் வரை பாதுகாப்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன், பிறந்து சில நாட்களே ஆன பூனைக் குட்டி ஒன்று தனியே கத்திக்கொண்டிருந்தது. அதை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தேன். வளர்ந்த பூனைகள் என்றால் எப்படியாவது பிழைத்துக்கொள்ளும். ஆனால் பிறந்த பூனைக் குட்டிகளால் என்ன செய்ய முடியும்? அவற்றுக்கு எதிரிகளும் அதிகம். அதனால்தான் குட்டிப் பூனைகளைக் காப்பாற்றும் பணியை முக்கியமாகக் கருதுகிறேன். நான் குட்டிகளைக் காப்பாற்றுவதை அறிந்த மக்கள், எங்கே பூனைக் குட்டிகள் ஆதரவின்றி இருந்தாலும் உடனே எனக்குத் தகவல் கொடுத்து விடுகிறார்கள். உடனே சென்று, குட்டிகளை மீட்டு வருவேன். 8 வாரங்கள் வரை உணவளித்து, நன்றாகக் கவனித்துக்கொள்வேன். பிறகு தேவைப்படுபவர்களுக்கு வழங்கி விடுவேன். தினமும் நள்ளிரவில் கூட 2, 3 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனாலும் நான் தொந்தரவாக நினைக்கவில்லை. என் வீட்டில் குறைந்தது 10 குட்டிகளாவது எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றன. 8 வாரங்கள் வரை அவற்றுக்குப் பெயர் எல்லாம் வைத்து விடுவேன். பெயர்ப் பஞ்சம் காரணமாக பீன்ஸ், நூடுல்ஸ் என்றெல்லாம் கூட சூட்டிவிடுகிறேன்’’ என்கிறார் ஹன்னா.

பூனைகளின் தாய்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் உணவகங்கள், ஷாப்பிங் மால்களில் கார்களை நிறுத்திவிட்டு, நிம்மதியாகச் செல்ல இயலாது. அங்கே கார்கள் திருடு போவது சர்வசாதாரணம். கார்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகிறார் மாஸ்டர் லோலோ. கராத்தே மாஸ்டரான 36 வயது லோலோ, காங்கோவைச் சேர்ந்தவர். முகத்தில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு, கராத்தே கலைகளைச் செய்து காட்டியபடி ஹாரிங்டன் சாலையில் உள்ள உணவகம் வாயிலில் நிற்கிறார். இதனால் கார் திருடர்கள் இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. மகிழ்ந்து போகும் கார் உரிமையாளர்கள் மாஸ்டர் லோலோவுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்கிறார்கள். ‘‘ஆரம்பத்தில் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மக்கள், இன்று ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள். திருடர்களிடமிருந்து கார்களைப் பாதுகாக்கும் பணி எனக்கும் பிடித்திருக்கிறது, மக்களுக்கும் பிடித்திருக்கிறது’’ என்கிறார் லோலோ. ‘‘மாஸ்டர் லோலோ இருப்பதால் எங்களால் நிம்மதியாகச் சாப்பிட முடிகிறது, நீண்ட நேரம் ஷாப்பிங் மாலில் சுற்ற முடிகிறது. கராத்தே மாஸ்டராக இருந்தாலும் மிகவும் மென்மையான மனிதர். இவரைப் போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. இவர் வந்த பிறகு கார்கள் திருடு போகவில்லை. யாராவது பிரச்சினை செய்ய வந்தால், அவர்கள் வேறோரு லோலோவைப் பார்ப்பார்கள். திறமையான இந்த மனிதர், தன்னுடைய கலையைப் பிறருக்கும் கற்பிக்கலாம்’’ என்கிறார் நான்ஸி. பொதுமக்கள் தாராளமாக லோலோவுக்குப் பணம் அளிப்பதால், சக ஊழியர்கள் இவருக்குச் சேரவேண்டிய டிப்ஸ்களைக் கூட அளிப்பதில்லை. அதை லோலோவும் கண்டுகொள்வதில்லை.

வித்தியசமான மாஸ்டர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x