Published : 02 Dec 2016 10:00 AM
Last Updated : 02 Dec 2016 10:00 AM

உலக மசாலா: எங்கெங்கு காணினும் பச்சையடா!

நியூயார்க்கில் வசிக்கும் எலிசபெத் ஸ்வீட் ஹார்ட், கடந்த 20 ஆண்டு களாக ஒரே வண்ண ஆடை களையே அணிந்து வரு கிறார். நேர்மறையான வண்ணம் பச்சை. வெவ் வேறு விதமான பச்சை வண்ணங்களில் ஆடை களை உடுத்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார். “ஆரம்பத்தில் பூப் போட்ட ஆடைகளைத்தான் அணிந்துகொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்பட, டிசைன் இல்லாத ஆடைகளுக்கு மாறினேன். ஒருநாளைக்கு ஒரு வண்ணத்தில் ஆடை அணிந்தேன். அதிலும் சலிப்பு வந்தது. பிறகு பச்சை வண்ணத்துக்கு மாறி, 20 ஆண்டுகளாக உறுதியாக நிற்கிறேன். ஆடைகளில் இருந்த பச்சை ஆர்வம் படிப்படியாக அதிகமானது.

வீட்டின் திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், பாத்திரங்கள், வாளிகள், கத்தி கைப்பிடிகள், கரண்டிகள், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், அடுப்பு, மிக்ஸி, பாட்டில்கள், அலமாரிகள், ஃபைல்கள், புகைப்படச் சட்டங்கள், சோஃபா, மூக்குக் கண்ணாடி, கைப்பைகள், பூந்தொட்டிகள், பொம்மைகள், செருப்புகள், கதவுகள் என்று எல்லாவற்றையும் பச்சை வண்ணத்துக்கு மாற்றிவிட்டேன். அப்படியும் பச்சை மேல் ஆர்வம் குறையவில்லை. அதனால் என் முடி, மஸ்காரா, நகப்பூச்சு வரை பச்சையாக்கிவிட்டேன்.

இதில் ஒன்றும் சிரமமில்லை. திட்டமிடாமல் இயற்கையாகவே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நான் கனடாவில் பசுமை சூழ்ந்த பகுதியில் வளர்ந்தேன். நியூயார்க் வந்தபோது அந்தப் பசுமைக்காக ஏங்கினேன். அதுதான் இன்று எல்லாவற்றையும் பச்சையாக மாற்றிவிட்டது என்று நினைக்கிறேன். பச்சை வண்ணத்தால் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் உற்சாகமாக விடிகிறது. 75 வயதிலும் அத்தனை சுறுசுறுப்பும் மகிழ்ச்சியுமாக வாழ்க்கை நகர்கிறது. வெளியே செல்லும்போது பெரியவர்கள் சந்தோஷமாகப் புன்னகை செய்வார்கள்.

குழந்தைகள் மகிழ்ச்சி யோடு கை கொடுப்பார்கள். பச்சை இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது” என்கிறார் எலிச பெத் ஸ்வீட்ஹார்ட். “எலிசபெத்துடன் பயணிப்பது சுவாரசியமாக இருக்கிறது. இவரைப் பார்த்தவுடன் கார்களில் செல்பவர்கள் உற்சாகத்தில் கத்துவார்கள். சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். பலரும் இவரை ‘மிஸ் க்ரீன்’ என்றே அழைக்கிறார்கள்” என்று மகிழ்கிறார் கணவர் டிலன்.

எங்கெங்கு காணினும் பச்சையடா!

பொதுவாக அணில்கள் பருப்பு, விதை, பழம், இலை போன்றவற்றை சாப்பிடக்கூடியவை. சில அணில்கள் உணவு கிடைக்காதபோது பூச்சிகள், சிறிய பறவைகள், கொறிவிலங்குகளைச் சாப்பிடுவதும் உண்டு. ஓர் ஆப்பிரிக்க அணில் பசியோடு காத்திருந்தபோது, எதிரில் ஓர் இளம் பாம்பு வந்தது. ஒரு நொடி தயங்கிய பிறகு, பாம்பு நகர ஆரம்பித்தது. அணில் சட்டென்று பாம்பின் மீது பாய்ந்து, வாலைக் கடித்தது. எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன பாம்பு, வேகமாக நகர முயன்றது. ஆனாலும் அணிலின் பிடி விடவில்லை.

வேறுவழியின்றி, கொத்தி விரட்டியது. கொத்தும்போது சற்று விலகி, மீண்டும் மீண்டும் பாம்பின் உடலைத் தன் கூரியப் பற்களால் பதம் பார்த்தது அணில். ஒருகட்டத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பாம்பு, உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொண்டது. அப்படியும் அணிலின் தாக்குதல் நிற்கவில்லை. சற்று நேரப் போரட்டத்துக்குப் பிறகு, அணில் களைப்படைந்தது. தலையிலிருந்து ரத்தம் வழிய பாம்பு வேகமாக ஓடி, உயிர் தப்பியது.

பசி வந்தால் பயமும் பறந்து போகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x