Published : 21 Feb 2016 11:16 AM
Last Updated : 21 Feb 2016 11:16 AM

உலக மசாலா: அடடா! நாற்காலிகளில் ஓய்வெடுக்கும் பல்லிகள்!

லிபோர்னியாவில் வசிக்கும் ஹென்றி லிஸார்ட், பல்லிகள் மீது மிகவும் அன்பும் ஆர்வமும் உடையவர். 1986-ம் ஆண்டு தன்னுடைய பெயரின் பின்பகுதியில் லிஸார்ட் என்று சேர்த்துக்கொண்டார். தன் வீட்டிலேயே பல்லிகள், பச்சோந்திகளை வளர்த்து வருகிறார். அவரது ஹில்ஸ் கஃபே விடுதியில் இரண்டு பச்சைப் பல்லிகளை வைத்திருக்கிறார். சிறிய நாற்காலிகளில் இரண்டும் மனிதர்களைப் போலவே அமர்ந்திருக்கின்றன. நாற்காலிகளைச் சுழற்றினாலும் இரண்டும் கண்டுகொள்ளவில்லை. கையைத் தலைக்கு அடியில் வைத்து ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றன. விடுதிக்கு வருகிற வாடிக்கையாளர்கள் இவற்றைச் சுற்றிச் சுற்றி புகைப்படங்கள் எடுக்கி றார்கள். மனிதர்களின் சத்தத்துக்கோ, கேமராக்களின் வெளிச் சத்துக்கோ இவை சிறிதும் பயப்படவில்லை. எல்லாவற்றையும் அமைதி யாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ‘‘50 பல்லிகள் வீடு முழுவதும் நிரம்பியிருக்கின்றன. இவற்றை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து, வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள் தயாரித்து வருகிறேன். தனக்கு இந்த இடம் பாதுகாப்பானது என்பதை பல்லி உணர்ந்துகொண்டால், அதைப் போல ஒரு சாதுவான பிராணியைப் பார்க்க முடியாது. பணம் சம்பாதிப்பது அல்ல என் நோக்கம். பல்லிகள் அற்புதமானவை என்பதைக் காட்டுவதே என் நோக்கம்’’ என்கிறார் ஹென்றி.

அடடா! நாற்காலிகளில் ஓய்வெடுக்கும் பல்லிகள்!

ப்பானைச் சேர்ந்த 22 வயது மாணவி ரெய்க்கோ ஹோரி, மனிதர்கள் வசிக்காத தீவுக்குச் சுற்றுலா சென்றார். அந்தத் தீவில் மனிதர்கள் வாழ்வதற்கான சாதகமான சூழல் எதுவும் இல்லை. இரவும் பகலும் தன்னந்தனியாக 19 நாட்களைக் கழித்திருக்கிறார். டுகாஸ்டவே என்ற சுற்றுலா நிறுவனம் வித்தியாசமான சுற்றுலாக்களை உலகம் முழுவதும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. ரெய்க்கோ தனியாக ஒரு தீவில் தங்கும் சாகச சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்தார். இதுவரை இந்தச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்த முதல் பெண் ரெய்க்கோதான்! ‘‘நான் இந்தச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுத்ததில் அந்த நிறுவனமே கவலையடைந்தது. உருப்பெருக்கிக் கண்ணாடியும் தற்காப்புக்கு ஒரு துப்பாக்கியும் என்னிடம் இருந்தன. தீவின் நுழைவாயிலில் ஒரு காவலர் இருந்தார். ஏதாவது ஆபத்து என்றால் நான் அவரைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆனால் அவரைப் பார்ப்பதற்கே 40 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும். முதல் 24 மணி நேரம் தனிமை என்னை மிகவும் வதைத்து விட்டது. இப்படியே இருந்தால் நான் வந்த நோக்கம் நிறைவேறாது என்று புரிந்தவுடன், என் மனநிலையை மாற்றிக்கொண்டேன். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதாவது விலங்குகள் வரும் சத்தம் கேட்டால் வேறு இடத்துக்குச் சென்றுவிடுவேன். கடலுக்குள் சென்று வேட்டையாடி, கடல்வாழ் உயிரினங்களை உணவாக்கிக்கொண்டேன். மழை வரும்போது தண்ணீரைப் பிடித்துக் குடித்துக்கொண்டேன். மற்ற நாட்களில் இளநீர் சாப்பிட்டேன். மழை வரும்போதுதான் தங்குவதற்கு ஒரு கூடாரம் இல்லை என்ற வருத்தம் வந்தது. மழைக்குப் பிறகு பூச்சிகளின் தொல்லை வேறு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் கிடைத்தது. இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்வதற்குப் பழகிக்கொண்டேன். திருப்தியாக என் தனிமைப் பயணம் முடிந்தது. பொதுவாகத் தனிமையை விரும்பும் நான் இந்த 19 நாள் பயணத்துக்குப் பிறகு, மனிதர்களை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்’’ என்கிறார் ரெய்க்கோ.

கொடுமையிலும் கொடுமையானது தனிமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x